சனி, 21 ஏப்ரல், 2012

கர்வம் vs தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை vs கர்வம்

தன்னம்பிக்கை vs கர்வம்
தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இரண்டுக்கும் இடையே நூலிழை வித்தியாசம் தான் இருப்பது போலத் தோன்றினாலும் அவை தரும் விளைவுகளில் மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் இருக்கிறது.
“என்னால் முடியும்” என்று நினைப்பது தன்னம்பிக்கை. “என்னால் மட்டுமே முடியும்” என்று நினைப்பது கர்வம். தன்னம்பிக்கை எல்லா சாதனைகளுக்கும் மூல காரணமாக உள்ளது. கர்வம் எல்லா அழிவுக்கும் காரணமான விஷமாக உள்ளது. இதை விளக்க உதாரணங்களுக்குப் பஞ்சமில்லை என்றாலும் இந்த இரண்டுமே ஒரே நபரிடத்தில் எப்படி விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதைக் காண வேண்டுமென்றால் ஹிட்லரின் வாழ்க்கையைப் பார்த்தால் போதும்.
அசாதாரணமான அறிவும், தன்னம்பிக்கையும் கொண்ட ஹிட்லர் நாட்டின் நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ளும் முன் ஜெர்மனியில் வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக இருந்தது. நாட்டின் பொருளாதார நிலைமை மிக மோசமாக இருந்தது. ஆனால் தன்னால் நாட்டை நல்ல நிலைமைக்குக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை திடமாக அவரிடம் இருந்தது. 1933ல் ஹிட்லர் தன் நாட்டு மக்களிடம் கூறினார். “எனக்கு நான்கே நான்கு வருடங்களைக் கொடுங்கள்.” சொன்னபடி நாட்டின் தலைவிதியை மாற்றிக் காட்டினார். எழுபது லட்சம் பேர் வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்த நாட்டில் தொழிற்சாலைகளையும், வாணிப அபிவிருத்தியையும் ஏற்படுத்தி வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கினார். நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மிக நல்ல உயர்த்தினார். எல்லாம் அவரது தன்னம்பிக்கை செய்து காட்டியது.
ஆனால் அதே தன்னம்பிக்கை கர்வமாக மாற ஆரம்பித்தவுடன் அழிவும் ஆரம்பித்தது. தன்னை மிஞ்ச ஆளில்லை என்ற எண்ணம் வலுப்பட ஆரம்பித்தவுடன் அவர் எடுத்த முடிவுகள் அவரது நாட்டை மட்டுமல்லாமல் உலகத்திலேயே பேரழிவுகளை ஏற்படுத்தின. இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட அழிவுகளை இன்னமும் கூட சரியாக கணிக்க முடியவில்லை என்று வரலாற்று வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
தன்னம்பிக்கை ஏற்படுத்திய வளர்ச்சியையும், கர்வம் ஏற்படுத்திய பேரழிவையும் ஒரே மனிதனின் வாழ்க்கையில் ஆதாரபூர்வமாக சரித்திரம் சொல்கிறது. ஹிட்லரின் வாழ்வில் மட்டுமல்ல ஒவ்வொரு மனிதன் வாழ்க்கையிலும் இந்த இரண்டுமே இதே விளைவுகளையே ஏற்படுத்தக் கூடியவை. அதுவே இயற்கையின் நியதி.
எனவே தன்னம்பிக்கையுடன் இருங்கள். அது தான் உங்களை உயர்த்தக் கூடியது. உங்கள் வாழ்க்கையை ஒளிமயமாக்கப் போவதும் அந்த தன்னம்பிக்கை தான். ஆனால் அது கர்வம் என்ற விஷமாக மாறி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தன்னை உயர்வாக நினைக்கும் அதே சமயம் மற்றவர்களைத் தாழ்வாக நினைக்கவும் ஆரம்பித்தால் கர்வம் நுழைய ஆரம்பிக்கிறது என்று அர்த்தம்.
தன் சாதனைகளைப் பெருமைப்படுத்தியும், மற்றவர் சாதனைகளை சிறுமைப்படுத்தியும் நினைப்பதும் கர்வமே. தன் தவறுகளை தவறுகளே அல்ல என்று சாதிப்பதும் கர்வத்தின் ஒரு குணமே. மற்றவர்களுடைய சிறு தவறுகளையும் சுட்டிக் காட்டி மகிழ்வதும் கர்வத்தின் தன்மையே. தனக்கு எதிரான எதையும் சகிக்க முடியாததும், மற்றவர் சாதனையை ரசிக்க முடியாததும் கர்வத்தின் செயல்களே.
அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது போல, மேலே சொன்ன கர்வத்தின் அடையாள குணங்கள் நம்மிடம் இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்வது நல்லது. அடைந்த உயர்வில் இருந்து சறுக்கி விழாமல் இருக்கவும் மேலும் உயரவும் அது தான் ஒரே வழி.

கர்வம் vs தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை vs கர்வம்
தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இரண்டுக்கும் இடையே நூலிழை வித்தியாசம் தான் இருப்பது போலத் தோன்றினாலும் அவை தரும் விளைவுகளில் மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் இருக்கிறது.
“என்னால் முடியும்” என்று நினைப்பது தன்னம்பிக்கை. “என்னால் மட்டுமே முடியும்” என்று நினைப்பது கர்வம். தன்னம்பிக்கை எல்லா சாதனைகளுக்கும் மூல காரணமாக உள்ளது. கர்வம் எல்லா அழிவுக்கும் காரணமான விஷமாக உள்ளது. இதை விளக்க உதாரணங்களுக்குப் பஞ்சமில்லை என்றாலும் இந்த இரண்டுமே ஒரே நபரிடத்தில் எப்படி விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதைக் காண வேண்டுமென்றால் ஹிட்லரின் வாழ்க்கையைப் பார்த்தால் போதும்.
அசாதாரணமான அறிவும், தன்னம்பிக்கையும் கொண்ட ஹிட்லர் நாட்டின் நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ளும் முன் ஜெர்மனியில் வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக இருந்தது. நாட்டின் பொருளாதார நிலைமை மிக மோசமாக இருந்தது. ஆனால் தன்னால் நாட்டை நல்ல நிலைமைக்குக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை திடமாக அவரிடம் இருந்தது. 1933ல் ஹிட்லர் தன் நாட்டு மக்களிடம் கூறினார். “எனக்கு நான்கே நான்கு வருடங்களைக் கொடுங்கள்.” சொன்னபடி நாட்டின் தலைவிதியை மாற்றிக் காட்டினார். எழுபது லட்சம் பேர் வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்த நாட்டில் தொழிற்சாலைகளையும், வாணிப அபிவிருத்தியையும் ஏற்படுத்தி வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கினார். நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மிக நல்ல உயர்த்தினார். எல்லாம் அவரது தன்னம்பிக்கை செய்து காட்டியது.
ஆனால் அதே தன்னம்பிக்கை கர்வமாக மாற ஆரம்பித்தவுடன் அழிவும் ஆரம்பித்தது. தன்னை மிஞ்ச ஆளில்லை என்ற எண்ணம் வலுப்பட ஆரம்பித்தவுடன் அவர் எடுத்த முடிவுகள் அவரது நாட்டை மட்டுமல்லாமல் உலகத்திலேயே பேரழிவுகளை ஏற்படுத்தின. இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட அழிவுகளை இன்னமும் கூட சரியாக கணிக்க முடியவில்லை என்று வரலாற்று வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
தன்னம்பிக்கை ஏற்படுத்திய வளர்ச்சியையும், கர்வம் ஏற்படுத்திய பேரழிவையும் ஒரே மனிதனின் வாழ்க்கையில் ஆதாரபூர்வமாக சரித்திரம் சொல்கிறது. ஹிட்லரின் வாழ்வில் மட்டுமல்ல ஒவ்வொரு மனிதன் வாழ்க்கையிலும் இந்த இரண்டுமே இதே விளைவுகளையே ஏற்படுத்தக் கூடியவை. அதுவே இயற்கையின் நியதி.
எனவே தன்னம்பிக்கையுடன் இருங்கள். அது தான் உங்களை உயர்த்தக் கூடியது. உங்கள் வாழ்க்கையை ஒளிமயமாக்கப் போவதும் அந்த தன்னம்பிக்கை தான். ஆனால் அது கர்வம் என்ற விஷமாக மாறி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தன்னை உயர்வாக நினைக்கும் அதே சமயம் மற்றவர்களைத் தாழ்வாக நினைக்கவும் ஆரம்பித்தால் கர்வம் நுழைய ஆரம்பிக்கிறது என்று அர்த்தம்.
தன் சாதனைகளைப் பெருமைப்படுத்தியும், மற்றவர் சாதனைகளை சிறுமைப்படுத்தியும் நினைப்பதும் கர்வமே. தன் தவறுகளை தவறுகளே அல்ல என்று சாதிப்பதும் கர்வத்தின் ஒரு குணமே. மற்றவர்களுடைய சிறு தவறுகளையும் சுட்டிக் காட்டி மகிழ்வதும் கர்வத்தின் தன்மையே. தனக்கு எதிரான எதையும் சகிக்க முடியாததும், மற்றவர் சாதனையை ரசிக்க முடியாததும் கர்வத்தின் செயல்களே.
அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது போல, மேலே சொன்ன கர்வத்தின் அடையாள குணங்கள் நம்மிடம் இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்வது நல்லது. அடைந்த உயர்வில் இருந்து சறுக்கி விழாமல் இருக்கவும் மேலும் உயரவும் அது தான் ஒரே வழி.

நல்ல சத்துள்ள பேரிச்சம் பழங்கள்

உலகில் மொத்தம் 2,500 வகை பேரிச்ச மரங்கள் உள்ளன. இதில், 120 வகை பேரிச்ச மரங்கள், ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் உள்ளன. பேரிச்சம் பழம் வளைகுடா நாடுகளில் தான் அதிகளவு விளைகிறது. அங்கு உயர் தரமான பேரிச்சம்பழங்களையே மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். தரம் குறைந்த பேரிச்சம் பழங்கள், விலங்குகளின் உணவாக பயன்படுகின்றன. பேரிச்ச மரத்தின், அடிப்பகுதி, தண்டு, இலைகள், நார்கள் போன்றவை கைவினைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. இதன், பாரம்பரிய வரலாற்றின் காரணமாக, ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில்,பேரிச்சம்பழங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில், 1978ம் ஆண்டு, 23 லட்சமாக இருந்த பேரிச்ச மரங்களின் எண்ணிக்கை, 2003ம் ஆண்டு 4.07 கோடியாக அதிகரித்துள்ளது.


பேரிச்சம்பழத்தின் ஊட்டச்சத்து மதிப்பு:
சாப்பிடாமல் இருப்பவர்களுக்கு விரைவில் சக்தியளிக்க கூடிய ஒரு உ<ணவு பேரிச்சம்பழம். சாப்பிடுவதற்கு, 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்னால், பேரிச்சம்பழங்கள் சிலவற்றை சாப்பிட்டால், ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து பசி உணர்வு குறையும். இது அதிகளவு உணவு சாப்பிடுவது மற்றும் அதனால் ஏற்படும் சோர்வில் இருந்து தடுக்கவும் உதவும்.
இந்த காரணத்தால் தான், நீரிழிவு நோயாளிகளுக்கு தாழ்நிலை சர்க்கரை ஏற்படும் போது, மூன்று பேரிச்சம்பழங்கள் வரை சாப்பிட பரிந்துரைக்கப்படுகின்றனர்.
100 கிராம் பேரிச்சம்பழத்தில், 21 கிராம் நீர்ச்சத்து, 75 கிராம் கார்போஹைட்ரேட், 0.4 கிராம் கொழுப்பு சத்து மற்றும் 2.5 கிராம் புரதச்சத்து அடங்கி உள்ளது.
மினரல்கள்:
பேரிச்சம்பழத்தில் 15 வகை மினரல்கள் அடங்கி < உள்ளன. 100 கிராம் பேரிச்சம் பழத்தின் சதைப்பகுதியில், 648 மி.கி., பொட்டாசியம், 59 மி.கி., கால்சியம் மற்றும் 1.3 மி.கி., இரும்பு சத்து ஆகியவை உள்ளன. அதிக ரத்த அழுத்தம் உடையவர்களுக்கு பேரிச் சம்பழம் மிகவும் நல்லது. சிலவகை கடும் நோய்களில் இருந்து தற்காத்து கொள்ள, பேரிச்சம்பழங்கள் உதவுகின்றன.

கொழுப்பு சத்து:
பேரிச்சம்பழத்தின் சதைப்பகுதியில் மிகவும் குறைவாக, 0.2 சதவீதம் முதல் 0.5 சதவீதம் வரையே கொழுப்பு சத்து உள்ளது.

நார்ச்சத்து:
பேரிச்சம்பழத்தில் பெக்டின் மற்றும் செல்லுலோஸ் என்ற நார்ச்சத்துகள் உள்ளன. 100 கிராம் பேரிச்சம்பழத்தின் சதைப்பகுதியில், 6.5 கிராம் முதல் 11.5 கிராம் வரையிலான நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. பிற பழங்களை விட அதிகமாக, பேரிச்சம்பழங்களில் தான், 3.5 சதவீதம் முதல் 5.5 சதவீதம் வரையிலான அளவு பெக்டின் நிறைந்துள்ளது. பெக்டின், ரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.

புரதச்சத்து:
100 கிராம் பேரிச்சம்பழத்தின் சதைப்பகுதியில், 2.5 கிராம் புரதச்சத்து உள்ளது. ஏழு பேரிச்சம்பழங்கள் சாப்பிட்டால், அதனால், 1 கிராம் புரதச்சத்து கிடைக்கிறது.

கலோரி:
ஒரு கிராம் பேரிச்சம்பழத்தில், மூன்று கிலோ கலோரிக்கு சற்று குறைவாக உள்ளது. 100 கிராம் பேரிச் சம்பழத்தில், 280 கிலோ கலோரி உள்ளது. 30 வயது முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள், தினமும் 38 கிராம் பேரிச்சம்பழம் சாப்பிடலாம்.