செவ்வாய், 31 ஜனவரி, 2012

உலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் - விண்வெளி (Space)


 

 


விண்வெளியின் புதிர்களை அறிவதில் மனித குலத்துக்கு எப்போதுமே ஆர்வம் இருந்து வந்துள்ளது. சுமார் 1825 ஆண்டுகட்கு முன்பு "உண்மை வரலாறுகள் (True Histories)" என்ற தலைப்பில் லூசியான் என்ற கிரேக்க நையாண்டி எழுத்தாளர் ஒரு கற்பனை நூலை எழுதினார். அக்காலத்தில் நிலவி வந்த குற்றங்குறைகளின் அடிப்படையில் முழுக்க முழுக்கப் பொய்யும் கற்பனையும் கலந்த நூலாக அது விளங்கியது. கதிரவனுக்கும், நிலவுக்கும் சென்று பயணம் செய்யும் கற்பனைக் கதை அது.

அடுத்து வந்த பல நூற்றாண்டுகளில், விண்வெளி பற்றிக் குறிப்பிடத் தகுந்த நூல் எதுவும் வெளி வரவில்லை. இருப்பினும், நிலவைப் பற்றியும், விண்மீன்களைப் பற்றியும், அவற்றின் புதிர்களைப் பற்றியும் விளங்கிக் கொள்ள மக்கள் முயன்றே வந்துள்ளனர்.

நிக்கலஸ் கோபர்நிகஸ் என்ற போலந்து நாட்டு வானியல் வல்லுநர் தன்னுடைய ஆய்வுகளின் முடிவில், இந்த அண்டத்தின் மையத்தில் சூரியன் இருப்பதாகவும், இப்புவி ஒரு கோள் என்றும் கூறினார். இத்தாலி நாட்டு வானியல் அறிஞர் கலிலியோ 1610-ல் ஒரு தொலைநோக்கியைக் கண்டுபிடித்தார். இதன் வாயிலாக விண்வெளியையும், நிலவின் மேற்பரப்பையும் நெருக்கமாகப் பார்க்க முடிந்தது.

நிலவைப் பற்றியும், பிற கோள்களைப் பற்றியும் பல கண்டுபிடிப்புகளைக் கலிலியோ கண்டறிந்து வெளியிட்டார். அவரது கண்டுபிடிப்புகள் மக்களால் வரவேற்கப்படவில்லை. எனினும், ஒரு சில அறிஞர்கள் மட்டும் அவரது கருத்துகளால் ஈர்க்கப்பட்டனர். அப்போது முதலே விண்வெளிப் பயணம் பற்றிய முயற்சிகளில் அறிவியல் அறிஞர்கள் ஆர்வம் காட்டி வந்தனர் எனலாம்.

வில்கின்ஸ் என்னும் இங்கிலாந்து நாட்டு எழுத்தாளர் 1638-ல் ஒரு நூல் எழுதினார். அதில் நிலவுக்குப் பயணம் செய்ய 4 வழிகள் இருக்கக் கூடும் எனக் குறிப்பிட்டார். முதலாவது வழியில், தெய்வீக சக்தி ஒன்று மனிதனை நிலவுக்கு அழைத்துச் செல்லக் கூடும். இரண்டாவது, ஆற்றல் மிக்க மிகப் பெரிய பறவைகள் துணையுடன் நிலவுக்குப் பயணம் மேற்கொள்ள முடியும். அடுத்ததாக மிகப் பெரிய இறக்கைகளைக் கட்டிக் கொண்டு மனிதனே நிலவிற்குப் பறந்து செல்லலாம். நான்காவதாக, பறக்கும் எந்திரம் ஒன்றைக் கண்டுபிடித்து, அதில் அமர்ந்து நிலவுக்குச் செல்லலாம். இவையே அவர் கூறிய 4 வழிகள்.
பின்னர் ஐசக் நியூட்டன் விண்வெளி பற்றிப் பல அரிய உண்மைகளைக் கண்டறிந்து வெளியிட்டார். அவரது இயக்க விதிகள் (laws of motion) புதியதோர் அறிவியல் சிந்தனையை உலகிற்கு அளித்தது. புவியை விட்டு உயரே செல்லச் செல்ல, புவியின் ஈர்ப்பு விசை குறைந்து கொண்டே போகும் என்பதை அவர் நிரூபித்தார். மேலும் அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும், விண்மீன்கள் முதற்கொண்டு சின்னஞ் சிறு துகள்கள் வரை அனைத்தும் ஒன்றை ஒன்று கவர்ந்து இழுக்கும் ஆற்றல் உடையவை என்றும், அக்கவர்ச்சி விசையே ஈர்ப்பு விசை எனவும் நிரூபித்தார்.

விண்வெளிப் பயணத்தில் நியூட்டனின் ஈர்ப்புவிசை விதிக்கு முக்கிய பங்கு உண்டு. இவ்விதியின் அடிப்படையிலேயே, புவியின் கவர்ச்சி விசையிலிருந்து விண்வெளி ஓடத்தின் தப்பித்தல் திசை வேகம் தீர்மானிக்கப்படுகிறது. மேலும், நியூட்டன் கண்டுபிடித்த மூன்று இயக்க விதிகளும் விண்வெளிப் பயணத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன.

சுமார் 475 ஆண்டுகட்கு முன்பு வான்-ஹூ என்ற சீனர் நெருப்பு ஏவுகணை (fire rocket) ஒன்றைத் தயாரித்தார். நாற்காலி வடிவ ஊர்தி ஒன்றில் 47 ஏவுகணைகளில் வெடிப் பொருளை நிரப்பி அது உருவாக்கப்பட்டது. இதன் மீது அமர்ந்து கொண்டு விண்வெளியில் பறக்க இயலும் என அவர் நம்பினார். ஆனால் ஏவுகணைகளில் தீப்பற்றியவுடனே, அவர் உயரே தூக்கி எறியப்பட்டு, அதே வேகத்தில் தரையில் விழுந்து உயிர் இழந்தார்.

வான்-ஹூ அவர்களின் ஆய்வு தோல்வியில் முடிந்தாலும், அறிவியல் அறிஞர்கள் விண்வெளிப் பயணத்திற்குத் தகுதியான ஊர்தியைத் தயாரிக்கும் முயற்சியைக் கைவிடவில்லை. வில்லியம் காங்கிரேவ் என்ற இங்கிலாந்து நாட்டுப் போர்ப்படை அதிகாரி 1808ஆம் ஆண்டு துப்பாக்கி ரவையை ஏந்திச் செல்லும் ஏவுகணைகளைத் தயாரிக்கத் துவங்கினார். இத்தகைய ஏவுகணைகள் கடற் சண்டையில் பெரும் வெற்றியை ஈட்டித்தரும் என்று அவர் நம்பினார். அவர் கண்டுபிடித்த இவ்வகை ஏவுகணைகள் 1812-ல் அமெரிக்காவுடன் நடந்த சண்டையில் பயன்படுத்தப்பட்டன.

ஏவுகணையைப் பயன்படுத்தி அண்டவெளியை ஆய்வு செய்வது பற்றிய நூல் ஒன்றை கான்ஸ்டான்லின் சிலோவ்ஸ்கி என்ற இரஷ்ய நாட்டு அறிஞர் 1898-ல் எழுதி வெளியிட்டார். விண்வெளிப் பயணத்திற்குப் புதியதோர் துவக்கமாக இந்நூல் விளங்கியது.

அமெரிக்க-ஜெர்மன் நாடுகளின் விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து திரவ எரிபொருளைப் பயன்படுத்திச் செலுத்தும் ஏவுகணைகளை 1920-ல் உருவாக்கினர். முன்பு சொல்லப்பட்ட இரஷ்ய விஞ்ஞானியும் திரவ எரிபொருளைப் பற்றிக் கூறி இருந்தார். ஆயினும் அப்போது அவர் கருத்துக்கு அவ்வளவாக முக்கியத்துவம் தரப்படவில்லை.ஏவுகணை வடிவமைப்பில் அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் கோடர்ட் என்பவரும் முக்கிய பங்காற்றினார். அவரது முயற்சியால் துப்பாக்கி ரவையை ஏந்திச் செல்லும் ஏவுகணை உருவாக்கப்பட்டது. மேலும் திரவ எரிபொருளால் இயங்கும் ஏவுகணையிலும் அவர் ஆர்வம் காட்டினார். திட எரிபொருளை விட, திரவ எரிபொருள் அதிக ஆற்றல் வழங்குவதாக அவர் கண்டறிந்தார்.

கோடர்ட் பயன்படுத்திய திரவ எரிபொருளானது, பெட்ரோலில் இருந்து வடித்தெடுக்கப்பட்ட கேசொலின் (Gasoline) ஆகும். இந்த கேசொலினை எரிக்கத் திரவ உயிர்வளி (oxygen) பயன் படுத்தப்பட்டது. வளிம நிலையிலுள்ள உயிர்வளியானது அழுத்தத்தினால் குளிர்விக்கப்பெற்று திரவ நிலைக்கு மாற்றப்பட்டது. இதனை "லாக்ஸ் (lox)" எனக் கூறினர்.

திரவ எரிபொருளைப் பயன்படுத்தி இயக்கப்பட்ட முதலாவது சோதனை ஏவுகணையை கோடர்ட் 1926-ல் செலுத்தினார். ஆனால் அந்த ஏவுகணை அதிக உயரம் செல்லவில்லை. எனினும் 1929-ல் மேலும் ஒரு ஏவுகணை அவரால் செலுத்தப்பட்டது. அது சுமார் 90 அடி உயரம் விண்ணில் சென்று, கட்டுப்பாடு குறைவு காரணமாகத் தரையில் விழுந்துவிட்டது. சுழலாழிக் கருவியைப் (gyroscope) பயன் படுத்தி இந்தப் பிரச்சினையையும் கோடர்ட் தீர்த்து வைத்தார். சுழலாழிக் கருவி என்பது விரைந்து சுழலும் ஒரு சக்கரம்; இச்சக்கரத்தின் அச்சு ஒரு குறிப்பிட்ட திசையில் எளிதாகத் திரும்பக் கூடியது.

கோடர்ட் செலுத்திய இறுதி ஏவுகணை, மணிக்கு 550 கி.மீ. வேகத்தில், விண்வெளியில் சுமார் 1.25 மைல் தூரம் சென்றது. இரண்டாம் உலகப் போரின் போது அவர் அமெரிக்கக் கடற்படையில் சேர்ந்தார். குண்டுகளைப் பொழியும் போர் விமானங்களை மிகச் சிறிய இடத்திலிருந்து விண்ணுக்குச் செலுத்தக் கூடிய துணை உந்து கலங்களையும் கோடர்ட் வடிவமைத்தார். மேலும் அவர் வி-1, வி-2 என்ற ஏவுகணைகளைப் போரில் பயன்படுத்துவதற்காக ஜெர்மனியில் உருவாக்கினார். இவற்றின் முன்னேறிய வடிவங்களே எதிர்காலத்தில் விண்வெளி ஓடங்களாக உருவெடுத்தன.

வார்னர் வான் பிரான் (Warner Von Braun) என்ற ஜெர்மன் நாட்டு ஏவுகணைப் பொறியாளர் இரண்டாம் உலகப் போரின் போது தமது நாட்டை விட்டு அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தார். அங்கு அவர் விண்வெளி ஆய்வுக் குழுவுக்குப் பொறுப்பேற்றார். அவர் தலைமையில்தான் எக்ஸ்ப்ளோரர்-1 என்ற துணைக்கோள் (Satellite) வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தப்பட்டது. அடுத்து அவரது மேற்பார்வையில் சாட்டர்ன் (Saturn) ஏவுகணையும் தயாரிக்கப்பட்டது. முதல் முறையாக புவியிலிருந்து நிலவிற்கு மனிதர்களைக் கொண்டு செல்ல இதுவே பின்னர் பயன்படுத்தப்பட்டது. சிறு வயது முதலே வெர்னர் பிரான் விண்வெளியின் வியத்தகுக் காட்சிகளைக் காண்பதில் விருப்பம் கொண்டிருந்தார். அவரது தாயாரும் சிறு தொலைநோக்கி ஒன்றை மகனுக்கு அளித்து அவரது ஆர்வத்துக்கு ஊக்கம் அளித்தார். பின்னாளில் வெர்னர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியாக வளர்ந்தார்.

சோவியத் யூனியன் 1957 அக்டோபர் 4ஆம் நாள் ஸ்புட்னிக்-1 என்ற செயற்கைத் துணைக்கோளை வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தியது. உலகம் முழுதும் இச்செயலை மிகுந்த ஆர்வத்துடன் கவனித்தது எனலாம். இச்செயற்கைத் துணைக்கோள் சிறியதொரு நிலவை ஒத்திருந்ததோடு, புவியை 90 நிமிடங்களில் சுற்றி வந்தது. புவியிலிருந்து பல நூறு மைல்களுக்கு அப்பால் இந்தச் செயற்கைத் துணைக்கோள் நிலை நிறுத்தப்பட்டது. அடுத்து 1958 ஜனவரி 31-ல் அமெரிக்கா எக்ஸ்ப்ளோரர்-1 என்ற தனது துணைக்கோளை விண்வெளியில் செலுத்தியது. அடுத்து வந்த சில ஆண்டுகளில் சோவியத் யூனியனும், அமெரிக்காவும் மாறி மாறி துணைக்கோள்களை விண்வெளியில் செலுத்தின. விண்வெளிக் கண்டுபிடிப்புகள் பலவற்றில் ஈடுபட்டு நிலவுக்குச் செல்லும் முயற்சியில் இரு நாடுகளும் ஈடுபட்டன.

சோவியத் யூனியன் ஸ்புட்னிக்-1ஐத் தொடர்ந்து மற்றொரு விண்வெளிக்கலமான ஸ்புட்னிக்-II-ஐச் செலுத்தியது. அதில் லைகா என்ற பெயர் கொண்ட பெண் நாய் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு வாரம், பல இன்னல்கள் நிறைந்த விண்வெளிச் சூழ்நிலையில் அந்த நாய் இருந்து உயிர் வாழ்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எனவே விண்வெளிக்குச் சென்று உயிருடன் திரும்பி வந்த முதலாவது உயிரினம் என்ற பெருமை லைகா என்ற அந்தப் பெண் நாய்க்குக் கிடைத்தது.

விண்வெளிப் பயணத்தின் திருப்பு முனையாக, 1969 ஜூலையில், மனிதன் நிலவில் காலடி எடுத்து வைத்ததைக் குறிப்பிடலாம். அமெரிக்கா அனுப்பிய விண்வெளிக்கலமான அப்பலோ-II, நெயில் ஆம்ஸ்ட்ராங்க், எட்வின் இ ஆல்ட்வின் ஆகிய இரு விண்வெளிப் பயணிகளுடன் 1969 ஜூலை 20-ல் நிலவில் சென்று இறங்கியது.

பின்னர் பல துணைக்கோள்கள் பல்வேறு நாடுகளால் விண்ணில் செலுத்தப்பட்டன. அவை புவியின் மேற்பரப்பில் அமைந்துள்ள பல்வேறு முக்கிய தகவல்களை ஒளிப்படங்களாக அனுப்பி வைத்தன. அப்படங்களின் அடிப்படையில்தான் உலகின் பல நாடுகளின் வரை படங்களில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டன. மேலும் வானொலி, தொலைக்காட்சி ஆகிய தகவல் தொடர்பு அமைப்புகளில் துணைக்கோள் தொழில்நுட்பம் பெரும் மாற்றங்களை விளைவித்தது. முக்கியமாக நான்கு வகையான துணைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. அவை 1) கூர்ந்து நோக்கித் தகவல் திரட்டும் துணைக் கோள்கள், 2) தட்பவெப்பம் அறிவிக்கும் துணைக்கோள்கள், 3) தகவல் தொடர்புத் துணைக்கோள்கள், 4) பிறகோள்கள், விண்மீன்கள் பற்றிய தகவல்களைத் தந்து வழிகாட்டும் துணைக்கோள்கள் என்பனவாம்

புவியில் உள்ள பல இடங்களைப் பற்றிய சரியான தகவல்களையும், படங்களையும் அனுப்பி இதுவரை புரியாத புதிராக இருந்த பலவற்றிற்கு முதல் வகைத் துணைக்கோள்கள் விடையளித்தன. புவியிலுள்ள காடுகள், மலைகள், எரிமலைகள், கனிம வளங்கள், பனிப்பகுதிகள் ஆகியன பற்றிய பல விவரங்களை இவ்வகைத் துணைக்கோள்கள் அனுப்பி வைத்தன.

தட்பவெப்பத் துணைக்கோள்கள் அனுப்பும் தகவல்கள் வாயிலாகப் புயல், நிலநடுக்கம், பெருமழை, சூறாவளி பற்றிய தகவல்களை முன்கூட்டியே அறிய முடிவதுடன், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடிகிறது.

அடுத்த வகைத் துணைக்கோள்களால் தகவல் தொடர்பு அமைப்பில் பெரும் புரட்சியே விளைந்துள்ளது. ஒரே ஒரு துணைக்கோளின் வாயிலாக பல ஆயிரம் தொலை பேசிகளைச் செயற்படுத்த முடிகிறது. வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உலகின் எந்த மூலையிலும் ஒலி/ஒளி பரப்பச் செய்ய முடியும். அடுத்து, சில சிறப்பு வகைத் துணைக்கோள்களைப் பயன்படுத்திப் பிற கோள்களின் விவரங்களைப் பெற இயலும்.

திங்கள், 30 ஜனவரி, 2012

கொழுப்பானது 3 வகைப்படும்


கொழுப்பானது 3 வகைப்படும்.முதலாவது வகை L.D.L(Low Density Lipoproteins)
இதுதான் இரத்தகுழாய் அடைப்பிற்கு முக்கிய காரணமான
ஆபத்தான கொழுப்பாகும்.   

இரண்டாவது வகை H.D.L(High density Lipoproteins)அதிக
அடர்தியானது.இது உடலில் சேர்ந்தாலும் கல்லீரலுக்கு
போய் அங்கிருந்து கழிவாக வெளியேறும்.

மூன்றாம் வகை ட்ரைகிளிசரைட்-தசை நார்களுக்கு சக்கியைக்
கொடுப்பதாகும்.இது அதிகமாகும் போது இரத்தத்தில் சேர்கிறது.
இதயம் பாதிக்கும் போது இதன் அளவும் சரி பார்க்கப்படுகிறது.

200மில்லிகிராம் எனில் பிரச்சனையில்லை.200-239 வரை
ஆபத்தாகும்.240ற்கு மேலெனில் விபரீதத்திற்கு வழி
வகுக்கும். எல்.டீ.எல் 130வரையும் எச்.டீ.எல் 60ற்கு மேலும்
ட்ரைகிளிசரைட் 200இற்கு குறைவாகவும்
காணப்பட வேண்டும்.

             இரத்தத்தில் சேரும் கொழுப்பு சிறிது சிறிதாக அதிகமாகி
இரத்தக்குழாயின் சுவரில் ஒட்டி அதை தடிப்பாக்குகிறது.இதனால்
இரத்தம் போவது தடைப்பட்டு கொலஸ்ரோல்,மாரடைப்பு என்பன ஏற்படுகின்றது.
இவற்றைத் தடுக்க நாம் உண்ணும் சில உணவு வகைகள், மனஅழுத்தம் சில
பழக்கவழக்கங்களை தவிர்த்தல் நல்லது.
  •  

தக்காளி நலன்கள் பல

தக்காளி செலானேசியே (Solanaceae) குடும்பத்தைச் சேர்ந்த செடியினமாகும். இதன் அறிவியற் பெயர் Solanum Lycopersium என்பதாகும். இது ஓராண்டுத் தாவரமாகும். ஒன்று தொடக்கம் மூன்று மீற்றர் வரை வளரக்கூடியது. தக்காளியின் பிறப்பிடம் தென் அமெரிக்கா. இது சர் வால்டர் ராலே என்பவரால் முதன்முதலில் ஐரோப்பாவில் அறிமுகப்டுத்தப்பட்டது.

தக்காளியில் காணப்படும் லைக்கோப்பின் எனும் பொருளே இதன் நிறத்திற்கு காரணமாகிறது. இந்நிறப்பொருளில் புற்றுநோயைத் தடுக்கும் சக்தியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.மேலும் ஆண்களின் விந்தணு வீரியத்திற்கும் இது காரணமாவதாக சமீப கால ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.மேலும் கருஞ்சிவப்பு நிறத்தக்காளி ஆயுளைக் கூட்டுவதாகவும் அறியப்படுகிறது.

தக்காளியில் தண்ணீர் - 94.37%, புரொட்டீன் - 0.9%, கொலஸ்ட்ரால்- 0.4%, கார்போ ஹைட்ரேட்0.9%, மினரல்ஸ்-0.9%, விட்டமின் 'A'- 100IU / 100 கி, விட்டமின் - C, B1,B2, கால்சியம், பாஸ்பரஸ், மாக்னீசியும் மற்றும் பல உள்ளன.
காய் கறிகளில் மிகவும் எளிதிலும் விரைவாகவும் ஜீரணமாகக் கூடியது தக்காளி உடம்புக்கு ஆரோக்கியம் அளிக்கும் மூன்று விதமான புளிப்புகளும் தக்காளிப் பழத்தில் இருக்கின்றன.மற்றக் காய்களில் சிலவற்றில் ஒன்று அதிகமாகவும் மற்ற இரண்டும் குறைவாகவும் இருக்கும். மற்றும் சிலவற்றில் இரண்டு அதிகமாகவும் ஒன்று குறைவாகவும் இருக்கும். ஆனால் தக்காளிப் பழத்தில் மூன்றும் சரியான அளவில் இருக்கின்றன.இதனால் தான் ஏழைகளின் அப்பிள் என்றும் பெயர் பெறுகின்றது.

முதலாவது, ஆப்பிள் பழத்தில் இருக்கும் ஃபாலிக் அமிலம். இது பழத்துக்குப் புளிப்புத் தன்மை தருகிறது.இரண்டாவது எலுமிச்சம் பழம், சாத்துக்குடி, நாரத்தை முதலியவற்றில் இருக்கும் ‘சிட்ரிக்’ அமிலம் இதன் புளிப்பு கிருமிகளைக் கொல்லக் கூடியது.மூன்றாவது ஃபாஸ்ப்போரிக் அமிலம். இது நரம்பு, நாடி சம்பந்தமான நோய்களுக்கு மிகவும் நல்லது.இது உடலில் சேரும் கிருமிகளைக் கொன்று, அவை சுரக்கும் அமிலங்களைச் சக்தியற்றவையாக்குகிறது.தவிர பலவீனம், சோம்பல் இவற்றை நீக்கிச் சுறுசுறுப்பைத் தருகிறது. இருதய சம்பந்தமான நோய்களுக்கு இது ஏற்றது.

தக்காளியில் ஒரு விதமான ரசம் இருக்கிறது. அது உடலில் கட்டியிருக்கும் கபத்தைக் கரைத்து விடுகிறது. எனவே எளிதில் சளி வெளிவந்து விடுகிறது.
மலச்சிக்கலை நீக்கவும் மற்ற உணவுப் பதார்த்தங்களை விடத் தக்காளியில் அதிக அளவில் மக்னீசியம் இருக்கிறது. இதில் மக்னீசியத்தைத் தவிர இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செம்பு, சிறிது கல்சியம் ஆகியவையும் இருக்கின்றன. இது சுமார் ஒரு மணி நேரத்தில் ஜீரணமாகிவிடும். அதனால் ஜீரண சக்தி குறைவாயுள்ளவர்களுக்குத் தக்காளி ரசம் மிகவும் ஏற்றது. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் நல்ல புஷ்டியான ஒரு சிறந்த உணவு.

தக்காளியிலுள்ள மக்னீசியம் எலும்புகளையும் பற்களையும் உறுதிப்படுத்துகிறது.
மேலும் என்புருக்கி நோயையும் கட்டுப்படுத்துகின்றது.கல்சியத்தினால் எலும்பு வளர்ச்சி ஏற்பட்டாலும் மக்னிசியம் சிமெண்டைப் போல் எலும்புகளை ஒன்றோடு ஒன்று இணைக்கிறது. எலும்புகளும் உறுதிப்பட்டு ஒழுங்காக அமைகின்றன.

குழந்தைகளும் பெரியவர்களும் மக்னீசியம் உள்ள தக்காளியோடு கூட, கல்சியம் உள்ள பால் தயிர் முதலியன உட்கொள்வது மிகவும் அவசியம்.

அதனால் தக்காளி தயிர்ப்பச்சடி செய்து அவ்வப்போது உண்டு வரலாம்.
வைட்டமின் ‘சி’ குறைவு காரணமாக உடலில் அங்கங்கே வீக்கம் ஏற்படும். சக்தியும் குறையும், பல்லும் ஈறும் பலவீனப்படும். உடம்பு வளராமல் குள்ளமாகவே மனிதன் நின்றுவிடுவான். இதையெல்லாம் போக்கக் கூடிய விற்றமின்மின் ‘சி’ தக்காளியில் அதிக அளவில் கிடைக்கிறது.
மற்றும் விற்றமின்மின் ‘பி’யும் ‘சி’யுங்கூட இதில் இருக்கின்றன. சூரியனிலிருந்து கிடைக்கும் விற்றமின்மின் ‘டி’கூட இருக்கிறது.
  • இதில் குறைவான கார்போஹைட்ரேட் இருப்பதால் உடல் எடை குறைப்பிற்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் மிக சிறந்ததாகும். மேலும் குடலை சுத்தப்படுத்தும், மலச்சிக்கல், ஜீரணம், வாய்வு ஆகியவற்றையும் நீக்கும். கல்லீரல் நோய்க்கும், இரத்த சோகைக்கும் மிக சிறந்த பானமாகும் இதை காய்ச்சலின் போதும் குடிக்கலாம்.

தினந்தோறும் முட்டை சாப்பிடலாமா?

egg.jpg
14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள். இதனால் கிடைத்த விடை என்ன தெரியுமா?
இவர்கள் உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பதுதான்.
சத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள் இதயநோயைக் குணப்படுத்துகிறது. அதிக அளவு கொலஸ்ட்ரால் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் முட்டை சாப்பிட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கவில்லை. எனவே இதயநோய் அபாயமும் இல்லை.
முட்டை சாப்பிட்டால் இதய நோய் ஏற்படும் என்ற திகிலால் அமெரிக்காவில் முட்டை வியாபாரம் படு ‘டல்’. இதனால் அமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும்இ ஹார்வார்டு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்டுகளாக முட்டை உணவு பற்றி ஆராய்ந்தன. அதில்தான் இந்த உண்மைகள் வெளிவந்தன.
முட்டையில் கொலாஸ்ட்ரால் இருப்பது உண்மை! ஆனால் அதை அளவுடன் சாப்பிட்டால் இதயத்துக்கு எந்த விதமான கெடுதலையும் செய்யாது என ஹார்வார்டு பள்ளி தெரிவிக்கிறது.
‘சரிவிகித உணவு சத்துணவுத் திட்டம் தயாரித்து அதன்படி சாப்பிடுகிறவர்கள் தினமும் முட்டையை ஒதுக்க வேண்டாம். முட்டையில் தீய கொலாஸ்டிராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அளவும்இ டிரைகிளி செர்டைஸின் அளவும் இதே அளவு சக்தி வாயந்த தரத்துடன் இருக்கின்றன. எனவே தீய கொலஸ்ட்ரால் இரத்தத்தில் சேராது. இத்துடன் இதயத்துக்குப் பாதுகாப்பான ஃபோலிக் அமிலம் மற்றும் ‘பி’ குரூப் வைட்டமின்களும்இ நச்சு முறிவு மருந்துகளும் கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் (ருளௌயவரசயவநன குயவ) முட்டையில் உள்ளன’ என்கிறார் டாக்டர் டொனால்ட் மெக்மைரா.
1976ஆம் ஆண்டு முதல் பதினோரு அமெரிக்க மாநிலங்களில் தினமும் முட்டை சாப்பிட்டு வந்த நர்சுகளின் உடல்நிலை கவனிக்கபப்ட்டு குறிப்புகள் சேர்க்கப்பட்டன. இது 2 வருட ஆய்வு.
இது போக 1986ஆம் ஆண்டு முதல் அமெரிக்க பல் டாக்டர்கள் கண் டாக்டர்கள் மிருக வைத்தியர்கள் என தினமும் முட்டை சாப்பிட்டனர். இந்த டாக்டர்களிடம் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை கேள்வி கேட்கப்பட்டது. இவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு கடந்த 12 ஆண்டுகளில் அதிகரிக்கவில்லை. ஸ்டிரோக் அபாயமும் ஏற்படவில்லை.
80 ஆயிரம் நர்சுகளின் உடல் நலம் பற்றிய 14 ஆண்டு கால மருத்துவப் குறிப்பேடுகள்இ 37 ஆயிரம் ஆண்களின் உடல் நலக்கோளாறு பற்றிய எட்டு வருட மருத்துவக் குறிப்பேடுகள் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். அதுவும் பயமில்லாமல் சாப்பிடலாம் என்று உறுதியாகத் தெரிவிக்கிறது.
சாதாரண அவித்த முட்டையில்தான் இவ்வளவு நன்மைகள். இதில் வெண்ணெய் பன்றிக்கறி பாம் ஆயில் போன்றவை சேர்த்துச் சாப்பிட்டால் கெடுதல்தான்.
ஒரு நாளைக்கு 300 மில்லி கிராம் அளவுதான் கொலஸ்ட்ரால் நம் உணவில் சேரலாம். ஒரு முட்டையில் 213 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் இருக்கிறது. இதுவே இதயத்துக்கு நலம் பயக்கும்.
நீரிழிவு நோயாளிகள் தினமும் முட்டை சாப்பிடக்கூடாது. இது அவர்களுக்கு கெடுதல் உண்டாக்கும். டாக்டர் யோசனைப்படி வாரம் ஒரு முட்டை சாப்பிடலாம்.
மற்றவர்கள் முட்டையைக் கண்டு பீதி கொள்ளாமல் சிறந்த சத்துணவாக முட்டையை தினமும் உணவில் சேர்த்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள் என்று அமெரிக்கன் எக் போர்ட்டின் நியூட்ரிஷியன் சென்டர் அறிவிக்கிறது.

புதன், 25 ஜனவரி, 2012

மின்சாரத் தொடக்கம்

      
               மின்சாரம் இல்லாத வாழ்க்கையைப்பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது. பெரும்பான்மையான இயந்திரங்கள் மின் சக்தியாலேயே இயங்குகின்றன. மோட்டார் கார்கள், ரெயில் என்ஜின்கள், விமானங்கள் அனைத்துக்கும் மின்சக்தி தேவையாக இருக்கிறது. எலெக்ட்ரிக் என்ற சொல் கிரேக்க மொழியான எலெக்ட்ரான் என்பதில் இருந்து தோன்றியது. ‘ஆம்பர்‘ என்னும் பொருள்  துணியின் மீது உராய்ந்தால் அதற்கு சிறுசிறு துண்டு காகிதங்களை கவரும் சக்தி கிடைக்கிறது என்பதை கி.மு. 600-ல் கிரேக்க மக்கள் தெரிந்து வைத்திருந்தனர்.
                   உண்மையில் மின்சாரத்தை கண்டு பிடித்தவர் அலெக்சாண்டர் ஓல்டா என்பவர்தான். மின்சக்தியை உற்பத்தி செய்யும் எலெக்ட்ரிக் செல்லை முதன்முதலில் அவர் அறிமுகம் செய்தார். எலெக்ட்ரிக் செல் உருவாக்கப்பட்ட பிறகு மின்சக்தியில் இருந்து வெப்பசக்தி, ஒளிசக்தி மற்றும் காந்த விளைவுகளை பெறமுடிந்தது.
                  வோல்டா கண்டுபிடித்த செல்லில் ஒரு துத்தநாக தகடும், ஒரு தாமிரத் தகடும் நீர்த்த கந்தக அமிலத்தில் மூழ்கி இருக்குமாறு வைத்தார். இவற்றுடன் பொருத்தப்பட்டுள்ள கம்பிகளை இணைத்தால் மின்சக்தி கிடைக்கிறது. பிறகு இந்த செல் பல்வேறு விதங்களில் மேம்படுத்தப்பட்டது.


                  மின்சாரத்தை பொறுத்தவரையில் 1831-ல் மிகவும் புரட்சிகரமான செயலை செய்தவர் மைக்கேல்பாரடே என்பவர். ஒரு காப்பிடப்பட்ட தாமிரக்கம்பி சுருளின் இடையே காந்தத்தை முன்னும் பின்னும் நகர்த்தினால் மின்சக்தி உற்பத்தி ஆகிறது என்பதை அவர் கண்டு வெளியிட்டார். இதன் அடிப்படையில் மின்சார ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டன. 1867-ம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் முதன்முதலாக வெற்றிகரமாக டைனமோ என்ற ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்சார மோட்டார்களும், டிரான்ஸ்பார்மர்களும் உருவாக்கப்பட்டன. 19-ம் நூற்றாண்டு இறுதிக்குள் உலகின் சில பகுதிகளில் மின்சார உற்பத்தி தொடங்கப்பட்டு விட்டது.
                    1858-ல் அமெரிக்காவால் அருவியை பயன்படுத்தி டர்பைன்களை சுழலச் செய்து அதன் மூலம் மின்சக்தியை பெறுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நீர் மின்சார, அனல் மின்சார உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டன. 20-ம் நூற்றாண்டில் அணுசக்தி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அணுசக்தியால் மின்சக்தி உற்பத்தி செய்யும் நிலையங்கள் அமைக்கப்பட்டன. தற்சமயம் சூரியசக்தி மூலம் முழுமையான  மின்சக்தியை பெறுவதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர்.

ஆகாரத்தில் முக்கிய இடம் பெற்றது கீரை

கீரையின் மகத்துவத்தை வார்த்தைகளில் அடக்க முடியாது. பழங்காலம் முதலே மனிதனின் ஆகாரத்தில் முக்கிய இடம் பெற்றது கீரை. இதில் பலவகை இருந்தாலும், அனைத்து வகையான கீரைகளும் மனிதனின் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன. கீரையின் மகத்துவ பலன்களை பார்ப்போம்,


* புதினாக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நாக்கில் சுவை  உணர்வு அதிகமாகும். வாய் சுவையற்று இருந்தால் மாறிவிடும். வாந்தி போன்ற குமட்டல் நிற்கும். நல்ல பசியும் உண்டாகும். ரத்தத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சுத்தமாகும். வயிற்று பிரச்சினைகளும் தீரும்.

*
அரைக்கீரை என்று அழைக்கப்படும் அறுகீரை காய்ச்சல், ஜன்னி, கபம், வாதம் போன்ற நோய்களை நீக்கும் ஆற்றல் பெற்றது. ஆனால் வாயுக் கோளாறுகளை உண்டாக்கும்.

* முருங்கைக் கீரையில் இரும்புச் சத்து அதிகம். முருங்கைக் கீரையுடன் நெய் கலந்து, தினமும் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் உறுதி பெறும். ஆனால் புளி சேர்க்கக் கூடாது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரையும்.

*
கண்களில் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் சிறுக் கீரையை சாப்பிட்டு வந்தால், கண்களில் உள்ள சிக்கல்கள் தீர்ந்து விடும். குறிப்பாக கண் புகைச்சல் நீங்கி, பார்வை பிரகாசமாகும்.


* கொத்துமல்லிக் கீரை நல்ல வாசனையை உடையது. தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும். வாந்தி, குமட்டல் போன்றவை நிற்கும்.

* பசலைக் கீரையை, பசறைக் கீரை என்றும் சிலர் அழைப்பார்கள். இது அதிக சுவையை உடையது.  அடிக்கடி தண்ணீர் தாகம் எடுப்பவர்களுக்கு, இந்த கீரையை கொடுத்தால் நாவறட்சியை தீர்க்கும்.

*
பசி எடுக்காமல் இருப்பவர்களுக்கு வெந்தயக் கீரையை தொடர்ந்து கொடுத்து வந்தால் நன்றாக பசி எடுக்கும். உடல் ஆரோக்கியமாகும். கபம் மற்றும் வாயுக் கோளாறுகள் விலகும். அடிக்கடி வரும் இருமல் நீங்கும். நாக்கில் ருசி இல்லாமல் இருந்தால் மாறி சுவையுணர்வு ஏற்படும். வயிற்றில் ஏற்படும் உப்புசம் போன்றவற்றை நீக்கும். வாதம் மற்றும் காச நோய்களுக்கு வெந்தயக்கீரை மிகவும் நல்லது.

* வயது முதிர்ந்து நாடி, நரம்புகள் தளர்ந்து போனவர்களும், நடுத்தர வயதினரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய கீரை முளைக்கீரை. இந்தக் கீரை மிகவும் ருசியாக இருப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சிறுவர், சிறுமியருக்கும் முளைக்கீரை நல்லது. முளைக் கீரையை சாப்பிட்டால் நல்ல பசி எடுக்கும். காச நோயால் ஏற்படும் காய்ச்சலை நீக்கும் ஆற்றல் உடையது.

* புளிச்ச கீரை என்றழைக்கப்படும் புளிப்புக் கீரையை அடிக்கடி சாப்பிடுவோருக்கு வாத நோய்கள் நீங்கும். ரத்தத்தில் உள்ள உஷ்ணம் மற்றும் சிக்கல்கள் தீர்ந்து, சுத்தமாகும். கரப்பான் என்றழைக்கப்படும் நோய் அகன்று விடும். பித்தம் தொடர்பான நோய்களும் தீரும். நாக்கில் சுவையுணர்வை அதிகரிக்க வைக்கும். வயிற்றில் உள்ள கோளாறுகளை நீக்கும்.


*
காசினிக் கீரையை தினமும் சாப்பிடுவோருக்கு உடலுக்கு தேவையான தாதுக்கள் அதிகமாகும். உடம்பில் உள்ள உஷ்ணத்தை நீக்கும். மேலும் உஷ்ணம் தொடர்பான அனைத்து வியாதிகளையும்

ஆரோக்கியம் காக்கும் பூண்டு

                                                   ஆரோக்கியம் காக்கும் பூண்டு!



* பூண்டை அரைத்து, சருமத்தில் ஏற்படும் கட்டிகள் மீது பற்றுப் போல் போட்டால், கெட்டியாக உள்ள கட்டிகள் நாளடைவில் இளகிப் பழுத்து உடையும்.

* வெள்ளைப் பூண்டை அதே அளவு வெற்றிலை சேர்த்து நைய அரைத்து, இரவு படுக்கப் போகும்போது தேமல் உள்ள பகுதிகளில் பூசி, காலையில் குளித்தால் சில நாட்களில் தேமல் மறையும். மேலும் தோன்றாமலும் இருக்கும்.

* பெண்கள் பிரசவித்தவுடன், வேலிபருத்தி இலை, சுக்கு, பூண்டு, மிளகு ஆகிய ஒவ்வொன்றையும் 5 கிராம் அளவு எடுத்து இடித்து நீரில் போட்டு குடிநீர் போல ஆக்க வேண்டும். அதை மூன்று நாட்கள் பருகி வந்தால் கருப்பை அழுக்கு நீங்குவதுடன், சுருங்கவும் செய்யும்.

* சிலருக்குப் பித்தப் பையில் பித்தம் அதிகமாகி, குமட்டல், வாந்தி போன்றவை உண்டாகும். பூண்டுச் சாறு 15 மி.லி., இஞ்சிச் சாறு 15 மி.லி., தேன் 15 மி.லி. ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு அடிக்கடி சுவைத்துக் குடித்தால் பித்த வாந்தி நிற்கும்.
* சில பூண்டுப் பற்களை அரைத்து வெந்நீரில் அல்லது பாலில் கலந்து குடித்தால் போதும். வயிற்றுக் கோளாறுகள் அனைத்தும் நிவர்த்தியாகும்.

* கிருமித் தொற்றால் தலையில் ஆங்காங்கே மொத்தமாக முடி கொட்டக் கூடும். அந்த இடங்களில், பூண்டை நன்றாகத் தேன் விட்டு அரைத்துத் தடவி வந்தால் நல்ல பலன் இருக்கும். முடியில் தேன் பட்டால் நரைக்கும் என்பது தவறானது.

என்றும் நலவாழ்வு வாழ நீங்கள் நாட வேண்டிய டாக்டர்கள் 7

               என்றும் நலவாழ்வு வாழ நீங்கள் நாட வேண்டிய டாக்டர்கள் 7  பேர். இவர்கள் எம்.எஸ், எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பு படித்தவர்கள் அல்ல. ஆனால் அனைத்து மருத்துவ நிபுணர்களும் இவர்கள் நல்ல சிகிச்சை தருகிறார்கள் என்று சான்றளிக்கிறார்கள். இவர்கள்  ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் உடல் நலனைக் கட் டிக்காப்பதில் கைதேர்ந்த நிபுணர்கள். அவர்கள் யாரென்று அடையாளம் தெரிய வேண்டுமா? இதோ அவர்கள் முகவரி........

டாக்டர் -1

                 காலையில் எழுந்ததும் இவரிடம் உடலைக் காட்டுவதுதான், நமது  உடலைக் செக்கப் செய்துகொள்ளும் செலவில்லாத வழி. அவர்  உடனே பல வியாதிகளுக்கு மருந்தை உடலில் செலுத்திவிடுவார்.  காசு எதுவும் கேட்கமாட்டார். அந்த டாக்டர் வேறு யாருமல்ல  சூரிய ஒளிதான்.
சூரிய ஒளி புகாத வீட்டில் மருத்துவன் நுழைவான் என்பது  பழமொழி. சூரிய ஒளி உடலுக்கு நல்லது என்பதைக் கேள்விப்பட்டு  இருப்பீர்கள். அது என்னென்ன நலன்களை தருகிறது என்பது  தெரியுமா?

* சருமத்திற்கு பொலிவு தருகிறது. உடலில் நோய் எதிர்ப்புப் பணியைச்  செய்யும் ரத்த வெள்ளையணுக்கள் அதிகம் உற்பத்தியாக உதவும்.  இதனால் நோய் எதிர்ப்புத்தன்மை அதிகரிக்கும்.

* சூரிய ஒளி உணவு செரிமானத்தன்மையை அதிகரிப்பதில் முக்கியப்  பங்கு வகிக்கிறது. கழிவுகளை வெளியேற்ற உதவும், வளர்ச்சிதை  மாற்றத்தில் துணைபுரியும்.

* உடல் ஊட்டச்சத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வைட்டமின் டி  கிடைக்கச் செய்கிறது. சமீபத்திய ஆய்வு மாலை இளம்வெயிலில்  நடைபயணம் செய்வது ஆண்மை வீரியம் கிடைக்க உதவுவதாக  கூறுகிறது.

* காலை, மாலை இளம் வெயிலின் மூலம் உடலில் சூரிய ஒளி படு வதால் புறஊதாக்கதிர்கள் உடலில் படும். இது வைரஸ், பாக்டீரியா,  ஒட்டுண்ணி போன்ற கிருமிகளைக் கொல்லும் தன்மை கொண்டது.  உச்சிவெயிலில் கிடைக்கும் அதிகமான புறஊதாக்கதிர் உடலுக்கு  தீங்கு விளைவிக்கும்.

* வேனற்கட்டி, முகப்பரு, தோல் கொப்புளங்கள், பூஞ்சை பரவி செதி ல்கள் படிதல் போன்றவற்றை குணமாக்கும்.

* இன்னும் பல மருத்துவ குணங்கள் சூரிய ஒளிக்கு உண்டு. சூரிய  ஒளி படாமல் வாழுபவர்களுக்கு புற்றுநோய் ஏற்பட 70 சதவீத  வாய்ப்புகள் இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

       நலம் வாழ விரும்புபவர்கள் நிச்சயம் காலை, மாலை வெயிலில் சிறிது  நேரம் (குறைந்தது 10 நிமிடங்கள்) உலவும்படியான பணிகளைச்  செய்தாலே போதும்.  இந்த நன்மைகளெல்லாம் உங்களுக்குக் கிடை த்துவிடும்.

டாக்டர்-2

          கசப்பில்லா மருந்து தருவது இவரின் வாடிக்கை. எனவே அனைவரும்  மகிழ்ச்சியுடனே இவர் தரும் மருந்தை சாப்பிடுவார்கள். நோயில்லாத  நேரங்களிலும் எல்லாரும் இந்த மருந்தைச் சாப்பிடுகிறார்கள். மற்றம ருந்துகள் ஒருநாளைக்கு 3 டோஸ் என்றால் இந்த மருந்தை தினமும்  8 முதல் 10 டோஸ் (டம்ளர்) சாப்பிடலாம். அத்தனை சர்வசஞ்சீகை மூலிகை அது.
புரியவில்லையா...தண்ணீர்தாங்க அந்த மருத்துவர். இயற்கை தந்த  அற்புத மூலிகை இது. உடல் அதிகப்படியாய் இருப்பது தண்ணீர்தான்.  உடலில் ஒவ்வொரு செல்லும் பாதிக்குமேல் தண்ணீரைக் கொண்டி ருக்கிறது. தண்ணீர் உடலை எவ்வாறெல்லாம் வளப்படுத்துகிறது  தெரியுமா?

* சோடியம், பொட்டாசியம், குளோரைடு, பைகார்பனேட் அடங்கிய  எலக்ட்ரோலைட் என்னும் மூலக்கூறு உடல் இயக்கத்துக்கு  அவசியமானது. போதிய தண்ணீர் கிடைத்தால்தான் உணவுகளில்  இருந்து எலக்ட்ரோலைட் கிடைக்க ஏதுவாகும். இல்லாவிட்டால் செல் கள் வறண்டுவிடும் அல்லது மாண்டுபோகும்.

* உடல் தளதளவென்று அழகு பெற தண்ணீர் அவசியம். உடலில்  கொலஸ்ட்ரால் (கெட்ட கொழுப்பு) அதிகமாகாமல் தடுக்கும்.

* தினமும் சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு 2 கிளாஸ்  தண்ணீர் குடிக்க வேண்டும். காலையும் மாலையும் 1 மணி நேரம்  நடைபயணம் செய்தால் குடற்பகுதியில் பாதிப்புகளே வராது என்கிறார்  மருத்துவ நிபுணர் ஒருவர்.

* தண்ணீர் வாதநோய் ஏற்படுவதை தடுக்கும். இதயம், மூளைக்குச்  செல்லும் தமனிகள் தடையின்றி செயல்பட உதவுகிறது.

* மூளை 85 சதவீதம் தண்ணீரால் ஆனது. தண்ணீர் பருகுவதற்கேற்ப  மூளை புத்துணர்ச்சி பெறும். இதனால் நீங்கள் உற்சாகமாக செயல்படுவீர்கள். நினைவுத்திறன் அதிகரிக்கும், ஞாபகமறதி வியாதிகள்  ஏற்படாமல் தடுக்கும்.
தினமும் குறைந்தது 8 டம்ளர் (2 லிட்டர்) நீர் பருகுவது ஆரோக்கிய த்திற்கு அவசியம். உங்களின் தாகத்தில்தான் உடல் ஆரோக்கியத்தின் தாக்கம் இருக்கிறது என்கிறார் புளோரிடா மருத்துவ நிபுணர்  பத்மாங்கலிட்ஜ்.

டாக்டர்-3

           மூச்சை இழுத்துவிடுங்கள் என்றுதான் இந்த டாக்டரும் கூறுகிறார்.  அடுத்த நிமிடம் இவரது சிகிச்சையால் புத்துணர்வு அடைகிறார்கள்  அனைவரும். சுத்தமான காற்றுதான் நம்மை நலமாக வைக்கும் மூன்றாவது இயற்கை மருத்துவர்.
       காற்று உடலுக்குத் தரும் நன்மைகள் பல. காற்றுதான் உடலின்  எரிபொருள். நாம் உண்ணும் உணவுகள் செரிமானம் ஆகவும், செல் கள் வளர்ச்சிதை மாற்றம் அடையவும் காற்று தேவை. ஒரு நாளைக்கு  சுமார் 7ஆயிரத்து 50 லிட்டர் காற்று உள்ளிழுக்கப்படுகிறது.

* காற்று உணவு செரிமானம் ஆக உதவுகிறது.

* ரத்த ஓட்டம் ஆரோக்கியமாக இருக்க தூய காற்று அவசியம்.

* நல்ல காற்றை சுவாசிக்கும்போதுதான் நரம்புகள் ஆரோக்கியம்  பெறும்.

              ஒவ்வொரு சுவாசத்திலும் நம் நலவாழ்வு இருக்கிறது என்பதை  மறந்துவிடாதீர்கள். காற்றை மாசுபடுத்தாமல் வாழ்வதே நாம் செய்யும்  முதல் அறப்பணி.

டாக்டர்-4

            கொஞ்சம் கடினமான சிகிச்சை முறைகளை கடைபிடிப்பவர் இவர்.  தினமும் கொஞ்ச நேரம் தனக்கு ஒதுக்கக் கேட்கிறார். அவர் சொல் வதைக் கேட்டால் பலமடங்கு பலன் கிடைப்பதாக நலம் பெற்றவர்கள்  கூறுகிறார்கள்.
தேகப்பயிற்சிதான் உடலை உறுதிப்படுத்தும் நான்காவது மருத்துவர்.  உடற்பயிற்சியால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். அவற்றில்  முக்கியமான சிலவற்றைச் சொல்கிறோம்...

* உடற்பயிற்சி உடல்வலியைத் தருமென்று நீங்கள் நினைப்பதுண்டா?  அது மிகவும் தவறு. உடற்பயிற்சி உற்சாகம் தருவதாகும். நீங்கள் என் றாவது மன அழுத்தம் மிகுந்து காணப்பட்டால் 30 நிமிடம்  உடற்பயிற்சியில் ஈடுபட்டுப் பாருங்கள். மனமாற்றம் ஏற்பட்டு அமைதி  சூழ்ந்து கொள்ளும்.

* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தம்  வராமல் தடுக்கும். உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உத வுவதன் மூலம் பல வியாதிகளை தடுக்கும்.

* உடற்பயிற்சியால் சுவாசம் சீராகும். உடலுக்கு பலமடங்கு ஆற்றலும்  கிடைக்கும். அத்துடன் நிம்மதியான உறக்கமும் கிடைக்கச் செய்யும்.  இன்னுமொரு முக்கியமான விஷயம் உடலுறவுக்கான ஊக்கத்தை த ருவதில் உடற்பயிற்சி பெரும்பங்கு இருக்கிறது.

டாக்டர்-5

             இவர் கண்டிப்பான பேர்வழி. கட்டுப்பாடுகளை விதித்து உடல்நலனைக்  காப்பவர். கண்டிப்பு என்பதால் இவரை அணுகுபவர்கள் குறைவுதான்.  ஆனால் அணுகியவர்கள் நலம் பெறுவது உண்மை. எனவே இவரைக்  கொண்டாடாதவர்கள் இல்லை.
             டயட்தான் நலவாழ்வுதரும் 5-வது மருத்துவர். டயட் என்றால் உண வுக் கட்டுப்பாடு என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஊட்டம் நிறைந்த சத்துணவு சாப்பிடுவதே டயட் ஆகும். நாம்  இஸ்டம்போல் சாப்பிட்டு நோய்வாய்ப்படுவதால்தான் டாக்டர்கள் உண வுக் கட்டுப்பாட்டை (டயட்) பின்பற்றச் சொல்வார்கள்.

* டயட் கடைபிடிப்பது உடல் எடையை கட்டுப்பட்டுக்குள் வைக்கும்.  கொழுப்பு படியாமல் தடுக்கும். எப்போதும் டயட் கடைபிடிப்பவர்களை  நீரிழிவு, புற்றுநோய் போன்ற கொடிய வியாதிகள் அண்டாது. கோபம்,  மனஅழுத்தம், உயர்ரத்த அழுத்தம் போன்றவையும் வராது.

டாக்டர்-6

            மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்ததுதான் உங்கள் உடல் நலத்திற்கு கேடு. எனவே கொஞ்சம் ஓய்வெடுங்கள் என்பதுதான் இவரின்  ஆலோசனை. அதைப் பின்பற்றியவர்கள் நிம்மதியான உறக்கமும், ந ல்ல புத்துணர்ச்சியும் பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.
             இந்த டாக்டரின் பெயர் ஓய்வு. உழைப்பதற்கேற்ற ஓய்வு எடுத்தால்தான் மறுநாள் பணிகளை சுறுசுறுப்பாகச் செய்ய முடியும். ஓய்வு நேரத்தில் உடல் தளர்வு நிலைக்குச் சென்று தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது.  மூளையில் புதிய செல்கள் உற்பத்தி ஆகின்றன.
             ஓய்வு உடல் நலத்திற்கு மட்டுமல்லாமல் மனநலத்திற்கும் உதவுகிறது.  கவலை, மனஅழுத்தம் போன்றவற்றைக் குறைக்கிறது. ஒவ்வொருவ ரும் தினமும் 8 மணி நேரம் தூங்க வேண்டும். ஒன்றிரண்டு மணி  நேரம் வேலைசெய்யாமல் தளர்வாக இருந்து கலந்துறவாட வேண்டும்  அதுதான் பூரண நலம்தரும் ஓய்வாகும்.

டாக்டர்-7

               இவர் ஒரு அமைதிப் பேர்வழி. பல நேரங்களில் இவர் பேசும் மவுன  மொழி யாருக்கும் புரிவதில்லை. என்ன நடந்தாலும் பொருத்திருந்து  பார் நல்ல வழிபிறக்கும் எதுக்கும் ஒரு நேரம் வரவேண்டும் என்று  தத்துவம் பேசுவார். இதைக் கேட்டு எரிச்சல் அடைபவர்கள் பலர். பின்னாளில் அவர் சொன்னதுபோல் நடந்து நல்ல மாற்றம்  கிடைக்கும்போது அவரையே மறந்து மகிழ்ச்சியில் மூழ்கிவிடுவார்கள்  அனைவரும்.
               ஆமாம் இவர்தான் காலம் என்னும் கடைசி மருத்துவர். இவர் எந்த  வியாதியைத் தீர்க்கிறாரோ இல்லையோ கவலை என்னும் கொடிய  வியாதியைத் தீர்ப்பதில் இவரை மிஞ்சிய மருத்துவர் உலகில்  கிடையாது.
காலமே காயம் ஆற்றும் சிறந்த மருந்து என்பார்கள். அழுதவர் அடுத்த கணமே சிரிப்பது காலம் செய்யும் மாற்றம் என்பதை அனுபவ த்தில்தான் உணர முடியும்

சர்க்கரை சத்தில்லாத கலோரி

      

              மனிதன் அதிகம் உண்ணும் சத்து இல்லாத உணவுகளில் சர்க்கரையும் ஒன்று. உண்மையில் நம்முடைய உடலுக்கு சர்க்கரை அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது இதர உணவுகள் குளுகோஸ் ஆக மாற்றப்படுகிறது.
        சர்க்கரை உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு, உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி மற்றும் சத்தில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது.
சிகரெட், மது முதலியவற்றைப் போல் சர்க்கரையும் ஆபத்தானது என்றே சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், ரத்த அழுத்தம், சருமநோய்கள், முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக் கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், நீரிழிவு நோய் இப்படி எல்லாநோய்களுக்கும் சர்க்கரையும் ஏதாவது ஒருவிதத்தில் காரணமாகிறது.
         குளிர்பானங்கள், செயற்கை உணவு முதலியவைகளில் சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுகிறது. உங்கள் குழந்தைக்கு குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சர்க்கரை உள்ள உணவுகளைக் கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நீங்களே நோயாளியாக உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம்.
          இனிப்பும் கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரித்து விடுவதால், இதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் ரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபட்டு விடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசைநார்கள் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது.
         தினமும் 24 தேக்கரண்டி சர்க்கரை நமது உணவில் சேர்ந்தால் அது 92 சதவிகித வெள்ளை ரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உடையவை.
உடலில் அதிகஅளவு சர்க்கரை இருந்தால் அதைச் சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் ஹார்மோனுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் கழலையை உருவாக்குகிறது.
காபி, டீயில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சர்க்கரையை பயன்படுத்துங்கள், போதும். நம்முடைய உடம்பின் ஆரோக்கியத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.

தினமும் ஆரஞ்சு சாப்பிட்டு வந்தால்

       

எந்த வயதாக இருந்தாலும் பரவாயில்லை... எந்த நோயாளியாக இருந்தாலும் பரவாயில்லை. அவர்கள் தைரியமாக சாப்பிடக்கூடிய பழம் ஆரஞ்சு! இது உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் உறுதியை வழங்குகிறது.
 ஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் இளமை தோற்றம் உருவாகும்.
          தினமும் ஆரஞ்சு சாப்பிட்டு வந்தால் பசி ஏற்படும். மலச்சிக்கலை நீக்கும். நன்கு ஜீரணமாகும். கழிவுகள் வெளியேறி குடல் சுத்தமாகும்.
மேலும் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண் முதலியவை குணமாகும். நெஞ்சுவலி, இதய நோய், எலும்பு மெலிவு ஆகியவற்றை குணமாக்கும் ஆற்றல் உடையது ஆரஞ்சு.
         இதில் ஏ, பி, சி ஆகிய வைட்டமின்களும், ஏழு வகையான தாதுக்களும் உள்ளதால், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் அவசியம் சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி, ஆரஞ்சு பழத்தை  குறுக்கே இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழுவினால் முகம் பளபளப்பாகும் , என்பது கூடுதல் தகவல்.

மனித வாழ்க்கையில் 40 முதல் 60 வயது

             



          மனித வாழ்க்கையில் 40 முதல் 60 வயது வரையிலான காலகட்டம் மிக முக்கியமானது. உடல் எடை அதிகரித்தல், மன அழுத்தம், சர்க்கரை நோய், அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், மூட்டு நோய்கள், புற்றுநோய், வாழ்வியல் முரண்பாடுகளால் ஏற்படும் நோய்கள் போன்றவை இந்த வயதில் பலரையும் தாக்குகின்றன. நோய்த் தடுப்பில் கவனிக்கத்தக்கது 2 விஷயங்கள்.
ஒன்று: மாற்ற முடியாதது.
* வயதாவதை நம்மால் மாற்றவோ, தடுக்கவோ முடியாது. மூப்பு இயல்பானது என்பதால், முதுமைக்கு தக்கபடி உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறையும். அதனால் ஓரளவு உடல் பாதிப்பு ஏற்படவே செய்யும்.
* சுற்றுப்புறம் மற்றும் சீதோஷ்ணம்.
    சுற்றுப்புற சூழல் என்பது உலகளாவிய தாக்கத்திற்கு உட்பட்டது. நாளுக்கு நாள் சூற்றுப்புறச் சூழல் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சீதோஷ்ண நிலை இயற்கையோடு தொடர்புடையது. இவைகளின் தாக்கத்தால் ஏற்படும் நோய்கள் ஓரளவு மாற்ற முடியாததாகவே இருக்கிறது.
இரண்டு: மாற்றக் கூடியவை.
    நம்மில் சில மாற்றங்களை நாமே ஏற்படுத்திக்கொண்டால், நோய் நம்மை அண்டாமல் பார்த்துக்கொள்ளலாம். இதற்கு தகுந்தவைகளை நான்காகப் பிரித்து குறிப்பிடுகிறேன்.
*   இது நாம் நோயின்றி வாழ உணவில் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய மாற்றங்களைக் குறிப்பிடுகிறது.
    40-60 வயதுக்கு உள்பட்டவர்கள் தற்போது தினமும் 2500  கலோரி அளவிற்கு உணவு உட்கொள்கிறார்கள். அவர்கள் 1500 கலோரியாக குறைத்துக்கொள்ள வேண்டும். உணவைக் குறைத்தால், உடல் சுமை குறையும். இதற்காக தினமும் உட்கொள்ளும் உணவின் அளவில் 25 சதவீதத்தை குறைக்க வேண்டும். காலையில் 5 இட்லி சாப்பிடுகிறவர்கள், 3 இட்லியாக்குங்கள். அதுபோல் மதிய உணவு, இரவு உணவிலும் அளவைக் குறையுங்கள்.
     நாம் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரோட்டீன் ஆகிய மூன்று வகை சத்துக்கள் இருக்கின்றன. கார்போஹைட்ரேட்டில் இருந்து உடல் தேவையான சர்க்கரையை பெறும். கொழுப்பு சார்ந்த உணவில் இருந்து உடல் கொழுப்பை பெறும். புரோட்டின் உணவில் இருந்து தசை பலத்திற்கு தேவையான சக்தியை உடல் பெறும்.
    கார்போஹைட்ரேட் உணவை நாம் சாப்பிட்டதும் அது ஜீரணமாகி, ரத்தத்தில் சர்க்கரையாய் கலந்து, சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். சர்க்கரை நோய் வரக்கூடாது எனக் கருதுகிறவர்கள் கார்போஹைட்ரேட் உணவுகளை வெகுவாக குறைக்க வேண்டும்.
  

கார்போஹைட்ரேட் உணவுகளில் சர்க்கரை அளவை சிறிதளவு அதிகரிப்பது, பெருமளவு அதிகரிப்பது என 2 வகைகள் உண்டு. சிறிதளவு அதிகரிப்பதில் கோதுமை, பழவகைகள், பெரும்பாலான காய்கறிகள், பால், பருப்பு வகைகள் இடம் பெறுகின்றன. அரிசி, உருளைக் கிழங்கு, தர்ப்பூசணி, கார்ன் ப்ளாக், குளுகோஸ் போன்ற உணவுப் பொருட்கள் ரத்தத்தில்  பெருமளவு சர்க்கரையின் அளவை அதிகரிப்பதாகும்.
      நார் சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொண்டால் சர்க்கரை நோயில் இருந்து தப்பிக்க முடியும். மலச்சிக்கல் வராது. புற்று நோய் தாக்குதல் ஏற்படாது. காபி, டீ, குளிர்பானங்கள் தவிர்க்கப்பட வேண்டும். சுவைக்காகவும், நிறத்திற்காகவும் ‘பாஸ்ட் புட்‘ உணவுகளில் சேர்க்கப்படும் பொருட்கள் உடலுக்குகேடு விளைவித்து, நோயை வரவழைக்கின்றன. 40 வயதாகும் போதே உணவில் கட்டுப்பாட்டோடு இருந்துவிட்டால், பெரும்பாலான நோய்களில் இருந்து தப்பி விடலாம்.

**   இது நாம் உடற்பயிற்சி மூலம், நோயின்றி வாழ வழி காட்டுகிறது.
   உடலுக்கு உழைப்பு மிக அவசியம். உடலுழைப்பை முறைப்படுத்துவதுதான், உடற்பயிற்சி. குறைந்தது 30 நிமிடங்கள் வாரத்தில் நான்கு நாட்களாவது வேகமாக வியர்வை வரும் அளவிற்கு நடக்க வேண்டும்.
நடக்கும்போது உடல் எடை முழுவதும் கால்களில் தாங்கும். 50&60 வயதில் எல்லோருக்கும் அது ஏற்றதல்ல! அதனால் முழு உடல் எடையும் கால்களில் தாங்காத அளவிற்கு இருந்துகொண்டே செய்யும் சைக்கிளிங் பயிற்சி, நீச்சல் பயிற்சி போன்றவை சிறந்தது. யோகா, தியானம், பிரணாயாமம் போன்றவையும் மிக நல்லது. வயதாகும்போது மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மை குறையும். யோகா செய்தால், நெகிழ்வுத்தன்மை அதிகரித்து உடல் இயக்கம் சீராகும்.
    நான் ஒரு பெரிய ஆஸ்பத்திரிக்கு நோயாளிகளை பரிசோதிக்க செல்லும் போதெல்லாம் அங்கே லிப்டை இயக்குபவர், ரொம்ப அன்போடு ‘சார் லிப்ட்டில் வாங்க சார்.. சீக்கிரம் மேலே போகலாம்‘ என்பார். நான் அவரிடம் சிரித்தபடியே ‘சீக்கிரம் ‘மேலே‘ போய்விடக்கூடாது என்பதற்காகத்தான் நான் லிப்ட்டை பயன்படுத்தாமல் நடந்தே மாடி ஏறுகிறேன்‘ என்பேன். நாம் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்றால், நடந்தே மாடிப்படிகளில் ஏறவேண்டும்.
     ஆண்களில் பலர் வீடுகளில் படுத்து, டி.வி. பார்த்துக்கொண்டே ‘அதை எடுத்து வா.. இதை எடுத்துவா..‘ என்று மனைவிக்கு உத்தரவு போடுகிறார்கள். உத்தரவு போடாமல் அவர்களே எழுந்துபோய், அதை எடுத்துக்கொண்டு வந்தால் மனைவியிடம் மரியாதை கிடைக்கும். எழுந்து நடப்பதால் அவர்கள் உடலும் ஆரோக்கியமாகும்.

***  நாம் வாழ்க்கையை எளிதாக எடுத்துக்கொண்டால், மன அழுத்தம் வராது. மன அழுத்தத்தால் ஏற்படும் நோய்கள் அண்டாது.
    எதையும் டேக் இட் ஈசியாக எடுத்துக்கொள்ளாமல், சீரியசாக எடுத்துக்கொண்டால் மன அழுத்தம் ஏற்பட்டுவிடும். அந்த மன அழுத்தமே 40 முதல் 60 வயது வரையிலானவர்களை அதிக அளவில் நோயாளிகளாக மாற்றுகிறது.
    மிகச் சிக்கலான விஷயங்களைக்கூட எளிதாக கையாண்டு மகிழ்ச்சியாக வாழும் மனிதர்களும் இருக்கிறார்கள். சாதாரண விஷயங்களைக்கூட சமாளிக்கத் தெரியாமல் மன அழுத்தத்திற்குள் அமுங்கிப் போகிறவர்களும் உண்டு. மனிதர்கள் பிரச்சினைகளை எளிதாக சமாளிக்கும் ஆற்றலை மரபு வழியாகவும், வாழ்க்கையில் தான் பெற்ற அனுபவங்களின் வாயிலாகவும் பெறுகிறார்கள். தாங்கும் சக்தி கொண்டவர்கள் எதையும் எளிதாக எடுத்துக்கொள்கிறார்கள். அல்லாதவர்கள் அதை மன அழுத்தமாக மாற்றிக்கொள்கிறார்கள்.
     சமூக சேவையில் ஆர்வம் கொள்வது, ஆன்மிகத்தில் நம்பிக்கை கொண்டிருப்பது, வருவது வரட்டும் என்று நம்பிக்கையோடு செயல்படுவது போன்றவை மன அழுத்தத்தைக் குறைக்கும். மூத்தோரை மதித்தல், மன்னிக்கும் குணம், அடுத்தவர்களை காயப்படுத்தாமல் பேசுதல், பழிவாங்கும் குணம் இல்லாமை, ஒழுக்கத்தோடு வாழுதல்,  சட்டவிரோத செயல்பாடு இன்மை போன்றவை எல்லாம் மன அழுத்தத்தை தவிர்க்கும் மாமருந்தாகும். 60 வயதை நெருங்கும்போது வாழ்க்கை நெருக்கடியில் இருந்து விலகி, பேரக் குழந்தைகளோடு அதிக நேரத்தை செலவிட்டால் மனமும், உடலும் ஆரோக்கியம் பெறும்.

****  மது அருந்துதல், சரியான நேரத்திற்கு தூங்காமல் இருத்தல், தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுதல், ஒழுக்கமின்றி வாழ்தல் போன்றவைகளால் ஏற்படும் நோய்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. இத்தகைய முரண்பாடான பழக்கவழக்கங்களில் ஈடுபடாமல் இருந்தால், அது தொடர்புடைய நோய்கள் நம்மைத் தாக்காது.
   வாழ்க்கை முறை முரண்பாடுகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள் 40-60 வயதுகளில் மிக அதிகம். எதற்கெடுத்தாலும் விருந்து, விழா என்று அளவுக்கு அதிகமாக பிரச்சினைக்குரிய உணவுகளை உண்ணுதல், மது அருந்துதல், புகைப் பிடித்தல், செக்ஸ் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளுதல் போன்றவைகளை தவிர்க்க வேண்டும். தவிர்த்தால் அது தொடர்பான நோய்த் தாக்குதல் எதுவும் இல்லாமல் நிம்மதியாக வாழலாம்.
நோய் எதுவும் இல்லாவிட்டாலும் மேற்கண்ட பருவத்தில் வருடத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளவது மிக அவசியம். அதன் மூலம், நோய் எதுவும் இருப்பின் தொடக்கத்திலே கண்டறிந்து, சிகிச்சை பெற்று சரிசெய்திடலாம்.
40 முதல் 60 வயதுவரையிலான பருவம் வாழ்க்கையில் மிக இன்றியமையாதது. இந்த பருவத்தில் உடலையும், மனதையும் நன்றாக பராமரித்தால் ஆரோக்கியமாக 100 வயது வரை வாழலாம்.

பெட்ரோல்,டீசல்

பெட்ரோல்,டீசல்...

 டீசல் வாகனத்தில் பெட்ரோலையும், பெட்ரோல் வாகனத்தில் டீசலையும் மாற்றினால் என்னவாகும்?
               பெட்ரோல் எளிதில் ஆவியாகக்கூடிய குறைந்த வெப்பநிலையில் தீப்பற்றிக்  கொள்ளும்  எரிபொருள் ஆகும்.  பெட்ரோல்  எஞ்சினில் கார்புரோட்டல்  மூலம்  ஆவியாக்கப்பட்ட  பெட்ரோல்  ஆவியும்  காற்றுக் கலவையும் உள்ளிழுக்கப்படுகின்றன. இங்கு அவை 6  முதல் 8  மடங்கு அழுத்தப்பட்டு ஒரு மின்பொறியால் எரிக்கப்படுகிறது. இதனால்  விசை உண்டாகிறது.
         டீசல் எஞ்சினில் கார்புரேட்டரும் மின்பொறி உருவாக்கியும் கிடையாது. டீசல் சாதாரண வெப்பநிலையில் எளிதில் ஆவியாவதில்லை. எஞ்சினால் காற்று மட்டுமே உள்ளிழுக்கப்படுகிறது. இந்த காற்று 4 முதல் 24 மடங்கு அழுத்தப்படுகிறது. இதன்மூலம் காற்றின் வெப்பநிலை மிக அதிக அளவிற்கு உயர்த்தப்படுகிறது. இவ்வாறு வெப்பமடைந்த காற்றினுள் இஞ்செக்டர் மூலம் டீசல் தெளிக்கப்படுகிறது. அப்போது அது உடனே தீப்பற்றி எரிந்து விசையை உண்டாக்குகிறது. இத்தகைய டீசல் எஞ்சினினுள் பெட்ரோல் போட்டால் அதிக வெப்பமுள்ள காற்றுடன் சேரும்போது திடீரென வெடிக்கும். அதனால் டீசல் வாகனத்தில் பெட்ரோலையும், பெட்ரோல் வாகனத்தில் டீசலையும் போடக்கூடாது.

புற்றுநோய்

புகைத்தல், புகையிலை போடுதல், மதுப்பழக்கம், முதலியவற்றால், வாய்ப்புற்று நோயால் அதிகம் பேர் பாதிக்கப் படுகிறார்கள். பெண்களில் கருப்பைப் புற்றுநோய் அதிக அளவில் உள்ளது. வறுமை, உணவுப் பற்றாக்குறை, நல்வழி இன்மை,போன்றவையும்;, புற்று நோய்க்கு மூலகாரணமாகிறது. எது எப்படி இருப்பினும் தொடக்க காலத்திலேயே ஆய்வுகள் செய்து கொண்டால், புற்று நோயை உடன் கண்டுபிடித்து தகுந்த மருத்துவம் மேற்கொண்டு அழிக்கலாம். புற்றுநோய் தொற்று நோயாக இல்லாமல் பலவகைப்பட்ட நோய்களின் கூட்டாகவே இருக்கின்றது.

புற்றுநோய்:-
இழைமயங்களில் (வளைளரந)ஒரு கலம் (உநடட) மட்டும் முறைப்படி பிளவு படாததால், புதுக்கலத்தை, உருவாக்குகிறது. இந்தக்கலம் மாறுபட்டதாக இருக்கிறது. இது அந்த உறுப்பின் கலத்திற்கான, வேலையை, செய்வதில்லை. இது தன் முதிர்ச்சியை அடையாத கலமாக மாறுகிறது.இது பிளவு பட்டு, பல இலக்கக்கணக்கான கலங்களாகப் பெருகி, புற்றுநோயாக மாறுகிறது.இதற்கு ஆங்கிலத்தில், கேன்சர் (உயnஉநச)என்று பெயர். தொடக்க காலங்களில், புற்றுநோய், எவ்வகையான தொந்தரவுமின்றி உண்டாவதால், இதனை அறிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. முற்றிய நிலையில், விரைவாகவும், உடல் முழுவதிலும், பரவி விடுகிறது. உடலின் எதிர்ப்பு ஆற்றலால் இதனைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. ஊடுருவுதல், நிணநீர் வழி பரவுதல், இரத்தக் குழாய் வழி பரவுதல், போன்ற வழிகளால், புற்றுநோய் பரவி, இரத்தக்குழாய், நரம்பு, தசை, எலும்பு, நுரையீரல், கல்லீரல், மூளை போன்றவற்றிற்கு, பாதிப்பை ஏற்படுத்துகிறது. புற்றுநோய் தொடங்கிய இடத்தை, வளர்ச்சியின் முதல் நிலை என்றும், உடலின் பல இடங்களுக்கு பரவி அழிப்பதை, இரண்டாம் நிலை என்றும் கூறுகின்றோம்.

கருப்பைப் புற்றுநோய்:-
கருப்பைப்புற்று நோயை தொடக்க காலத்திலேயே, கலங்களில் சிறிய மாற்றம் தெரியும் போதே -பாப்சிமியர்- முறையில் கண்டுபிடித்துவிடலாம். கருப்பைப் புற்றின் மூலகாரணம், சரிவரத்தெரியவில்லை. கருப்பைவாயை தூய்மையாகக் கழுவுவதன்மூலம் இதனைத்தடுக்கலாம்.

ஆண்கள், ஆண்குறியில் வெள்ளை அழுக்கு இல்லாமல் பார்த்துக்கொள்வதாலும், பெண்கள் கருப்பை வாயில், அழுக்கு தங்காமல் பார்த்துக்கொள்வதன்மூலமும் கருப்பைப் புற்றைத் தடுக்க முடியும். இந்தப் புற்றுநோய் குணமாக கருப்பையை, எடுத்துவிடலாம் என்று நேர் மருத்துவ (அலோபதி) முறையில் கூறுவார்கள். ஆனால் எல்லா வகையான, ஆய்வுகளின் முடிவைத் தெரிந்து கொண்டு,மாற்று மருத்துவ (ஹோமியோபதி) மருந்துகளை முறைப்படி சாப்பிடுவதன் மூலம், நோய் பரவாமல் தடுக்க முடியும். நோய் வந்த பின்னர், கருப்பையை எடுத்து விடாமலேயே குணப்படுத்த முடியும்.

மார்பகப் புற்றுநோய்.
முதலில் இது பெண்ணிற்கே தெரியாமல் வலியில்லாத சிறிய கட்டியாகத்தோன்றுகிறது. சிலசமயம் இரத்தக் கசிவும் இருக்கலாம். ஆனால் ஒரு பெண், தன் மார்பகங்களை ஆய்வு செய்வதன் மூலம், தொடக்கத்திலேயே, கண்டுபிடித்துக் குணப்படுத்திக் கொள்ளலாம். மார்பகங்களை இழக்கவேண்டிய தேவையுமில்லை. இந்தப்புற்று பெரும்பாலும், தாய்ப்பால் கொடுக்காத பெண்கள், இளம் கைம்பெண்கள், (விதவைகள்) இளம் வயதிலேயே மாதவிலக்கு அடைந்த பெண்கள் கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவோர் போன்றவர்களுக்கு, வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். தொடக்க நிலையிலேயே கண்டுபிடித்து விட்டால் ஆற்றல் மிக்க மாற்று மருத்துவ (ஹோமியொபதி) மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்த முடியும்.

நுரையீரல் புற்று:
45 வயதுப் பொறியாளர் ஒருவர் தனக்கு சில ஆண்டுகளாகவே தொடர்சளித்தொந்தரவு இருப்பதாகக் கூறினார் பல மாதங்களாகவே குரலில் மாற்றமும் இருமலும் இருக்கிறது என்றார். காது மூக்குத் தொண்டை கலந்து புதிர்கதிர்ப் படம் இரத்த ஆய்வு செய்ததில் பீனிசமோ, கசமோ இல்லை என்றும், மருந்துகளைச் சாப்பிடும் போது நோய் குணமானதாகவும் பின் தொடர்ந்து, தொந்தரவுகள் இருப்பதாகவும் கூறினார். மூச்சுத் திணறல் பசியின்மை உடற் சோர்வு, அதிகமாக இருப்பதாகச்சொன்னார். நுரையீரற் புற்று அதிகமாக வெண் சுருட்டு குடிப்பவர்களுக்கும் வருவதாகக் கூறுவார்கள். ஆனால் இது புகைப் பிடிக்காதவர்களுக்கும் பெண்களுக்கும் வருகிறது. இந் நோயை, நுரையீரல் நோக்கி மூலம் அறிய முடிகிறது.உடல் மெலிவு அசதி; பசியின்மை, ஆகியவற்றிற்கு மருந்துகள் கொடுத்தேன். தொடர்ந்து மருந்துகளைச் சாப்பிட்டு வர 80 வீதம் குணமடைந்து விட்டார். விளுங்கும் போதும் அடைப்பு ஏற்பட்டாலும் அது வலி இல்லாமல் இருந்தாலும், இது உணவுக்குழாய்ப் புற்றுநோயின் முதற்கட்ட அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது.

மலக்குடல் புற்று.
இதை தொடக்க நிலையிலேயே உணர்வது மிகவும் கடினம். பொதுவாக இதை மூலம் என்றே கருதுவார்கள். மலம் கழித்தவுடன் இரத்தக் கசிவு, மலவாசலில் வலியும் எரிச்சலும் அரிப்பும் அதிகமாயும், அடிக்கடி மலச்சிக்கலும் இருக்கும்.இந்நோயை மூலம் என்று நினைக்காமல் உரிய ஆய்வுகளைச்செய்து நோயை விரைவில் குணப்படுத்த முடியும். இது போல் சிறுநீரில் தொடர்ந்து இரத்தக்கசிவும் அடைப்பும், உடலிழைப்பும், பசியின்மையும், மெல்லிய காச்சலும் இருந்தால், மருத்துவரை அணுகவேண்டும். சற்கரைநோய், ஈழைநோய், தொழுநோய், உடையவர்கள், புண்கள் வந்தால் அது வளர்ந்து, விரிந்து இருக்குமாயின், அதனை இழைய ஆய்வு மூலம் புற்று நோயா என அறிதல் வேண்டும்.

மஞ்சநோய் (மஞ்சட்காமாலை)

கணையப்புற்று அல்லது பித்தநீர்க்குழாய்ப்புற்று.
பொதுவாக பலவகைப்பட்ட நோய்நுண்ணி, (வைரசு)களாலும் குடிப்பழக்கத்தினாலும், ஏற்படக்கூடிய மஞ்சட்காமாலை சிலநாட்களில் மருந்துகள் சாப்பிடுவதால் சரியாகிவிடும். சரியாகாமல் வயிற்றுப்போக்கு, சுரம், நடுக்கம் மலம் வெள்ளையாகப் போதல் போன்றவை இருந்தால் உடன் கவனிக்கவேண்டும். இவை கணையப் புற்று, அல்லது பித்த நீர்க் குழாய்ப் புற்றாகவோ இருக்கலாம். தொடக்க காலத்திலேயே ஆய்வுகளைச்செய்து, மருத்துவம் செய்து கொள்ள வேண்டும். நோய் நுண்ணிகளாலும் குடிப்பழக்கத்தினாலும், ஏறு;படக்கூடிய மஞ்சணோய் நோய்க்கு மாற்று (ஹோமியோபதி) மருத்துவத்தில், மிகச்சிறந்த மருந்துகள் உள்ளன. இவற்றுடன் உணவில் பத்தியங்கள் கடைப்பிடிப்பதின்மூலம், குணப்படுத்த முடியும். இரைப்பைப்புற்று, மலக்குடல் புற்று, கல்லீரல் புற்று, பெரும்பாலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே அநேகமாக வருகிறது. பசியின்மை, உடல் எந்தக் காரணமுமின்றி இளைத்துக்கொண்டே போவதும் அதிக சோர்வு ஏற்படும்.40 வயதுக்கு மேற்பட்டவர்கள் காரணத்தைக் கண்டுபிடித்து மருத்துவம் மேற்கொள்ள வேண்டும்.

இரத்தப் புற்று நோய்.
1.எலும்புப் புற்று நோய். 2. நிணநீர் சுரப்பி புற்று நோய்.

இந்நோய்கள் எந்த வயதினருக்கும் வரலாம். காரணம் சரிவரத் தெரியவில்லை. இரத்தச்சோகை ஏற்பட்டு உடல் மெலிந்து, தளர்ந்து விடும். இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல், அதிகமாவதே இதற்குக் காரணமாகும். இதற்கு ஆங்கில மருத்துவத்தில் எலும்பு மச்சையை, மாற்றி வைத்து, அதன்மூலம், புதிய இரத்தத்தை உருவாக்கி, குணமாக்கலாம் என செய்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கு ஆகும் செலவு மிக அதிகம். ஆனால் இத்தகைய மருத்துவ முறையிலும் உறுதி சொல்ல முடியாது. ஆனால் மாற்று (ஹோமியோபதி )மருத்துவம், அதிகரித்து வரும் வெள்ளை அணுக்களை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் நோயையும் முழுமையாகக் கட்டுப்படுத்துகிறது.

மச்சப்புற்று:
மச்சங்களிலோ, மருக்களிலோ, ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

1.பரவுகின்ற மச்சம்.

2.புண்ணாகின்ற மச்சம்.

3.அடிப்பாகம் தடித்துக்கொண்டே இருக்கும் மச்சம்.

4.கறுத்துப்போகும் மச்சம். 5.பரவியும் நெறிகட்டியும் உள்ள மச்சம் இது தோல் புற்று எனப்படும்.

கட்டிகள்.

இவற்றில் இருவகையுண்டு.

1.தீங்கற்ற கட்டிகள். தீங்குள்ள கட்டிகள்.

இந்தத்தீங்குள்ள கட்டிகள், தொண்டை, நுரையீரல், கல்லீரல், இரப்பை குடல்போன்றவற்றில் வளர்கின்றன. இவைமிகவும் தீங்கானவை. ஆனால், தீங்கற்ற கட்டிகள், நரம்புக்கட்டி, இழைமக் கட்டி கொழுப்புக்கட்டி, போன்றவை மெதுவாக வளரக்கூடியவை. இவை பிற உறுப்புகளுக்கு பரவாததால் இவற்றால் இடர் இல்லை. ஆனால் தீங்கற்ற கட்டிகளில் புண்ணாவது, நெறிகட்டுவது, திடீரென்று வளர்வது, அழற்சி அசைவில்லாமல் இருப்பது போன்றவை இருந்தால் அவை பற்று நோயின் தொடக்கமாகக் கூட இருக்கலாம் என்பதனை உணரவேண்டும்.

புற்று நோய்க்கு ஆங்கில மருத்துவத்தில்.....

1.அறுவை மருத்துவம்.

2.கதிரியக்க மருத்துவம்.

3.வேதியல் மருத்துவம்.

4.இயக்குநீர் (ஹார்மோன்)மருத்துவமுறை.

5.நோயெதிர்ப்பு மருத்துவ முறை.

போன்ற முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.நேர் (அலேபதி) மருத்துவ முறையில் வேதியல் மருத்துவ முறையில், வேதியல்பொருட்களைப் பயன் படுத்துகிறார்கள். இவற்றை தனியாகவோ அல்லது சேர்த்தோ பயன்படுத்துகிறார்கள். இவற்றைப் புற்று நோய்க் கலங்களை (ஊநடடள) அழிக்கக் கொடுப்பதன் மூலம் நோய் பரவுவதைத் தடுக்க முடியும். ஆனால் இதில் பின் விளைவு என்னவென்றால், இவை நல்ல இழமையங்களையும், (வளைளரந) எலும்பின் உள் இழை மங்களையும், அழிக்கின்றன. இதனால் தீர்க்க முடியாத பின் வினைவுகள் ஏற்படுகின்றன. மேலும் நேர் மருத்துவ முறையில், தொடக்க காலத்திலேயே புறு;று நோயைக் கண்டுபிடித்தால் மட்டுமே குணப்படுத்து முடியும். முற்றிய புற்று நோயை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். முழுவதும் குணமாக்க முடியாது. வலி போன்ற தொந்தரவுகளிலிருந்து காப்பாற்ற மட்டும் தான் முடியும்.

நோயெதிர்ப்பு மருத்துவம் இன்னும், ஆய்வு அளவிலேயே உள்ளது. முழுவதும் இன்னும் சரிவர வளர்ச்சியடையவில்லை. ஆனால் மேற்கூறிய எந்த நேர் (அலேபதி) மருத்துவ முறையினாலும் நோயை ஓரளவிற்குக் கட்டுப்படுத்த முடியுமே தவிர குணப்படுத்த இயலாது.

மாற்று (ஹோமியோபதி) மருத்துவம்.
மாற்று மருத்துவத்தில்(ஹோமியோபதி)ஆற்றல் மிக்க மருந்துகள் புற்றுநோய் கலங்களை, அழிப்பதோடு மட்டுமல்லாது பரவாமலும் தடுக்கின்றன. இதனால் நோய் பக்கத்திலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும், பரவுவது தடுக்கப்படுகிறது. கலங்கள் அழிந்தவுடன் புதுக்கலங்கள், அழிந்தவுடன் புதுக்கலங்களையும், இம்மருந்துகள், உண்டாக்குகின்றன. எனவே தான் வரும் முன்னர் தடுப்பதிலும், வந்த பின்னர் குணப்படுத்துவதிலும், இம்மருந்துகள் முன்னணியில் நிற்கின்றன. மக்கள், புற்றுநோய் குறித்து மிகுந்த விழிப்புணர்வுடனும், கவனமாகவும் இருக்க வேண்டும். பொதுவாக நாள்பட்ட தொந்தரவும் திடீரென்று உடல் நிலையில் மாற்றமும், தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தால் உரிய ஆய்வுகள் மேற்கொண்டு, மிகக் குறைந்த விலையில், எளிதில் கிடைக்கக் கூடிய

மருத்துவம்


               ன்றைய நவீன உலகில் மக்களை இருவிதமான நோய்கள் அதிகமாக ஆட்டிப் படைக்கின்றன.
 

அவை நீரிழிவு, இரத்த அழுத்தம்.

இரத்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது.  இதய நோய் வந்தால் குணப் படுத்தவும், வராமல் தடுக்கவும் இயற்கை நமக்களித்த கொடைதான் காய்களும் கனிகளும்.

சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை பரிந்துரைக்கும் ஒரே வாசகம்தான் உணவில் கீரை, காய்கனிகளை அதிகம் சேருங்கள் என்பது.

இதயத்திற்கு இதம் தரும் பழங்கள் பல உள்ளன.  அவை இதயத்தை பலப்படுத்தி சீராக செயல்பட வைக்கும்.

ஆப்பிள் பழம் இதயத்திற்கு உற்சாகத்தையும், புத்துணர்வையும் தர வல்லது.  தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை என்கிறது ஒரு ஆங்கில பழமொழி.

“An apple a day, keeps the doctor away”  இதிலிருந்து ஆப்பிளின் மருத்துவப் பயன் நமக்கு புரியவரும். 

இதுபோல் புத்தம் புது திராட்சை, அன்னாசி, ஆரஞ்சு, சீதாபழம் ஆகியவை இதயத்தை பலப்படுத்தும்.

வாதுமையும் தேங்காய் நீரும் இதயத்திற்கு ஊக்கம் அளிப்பவை.

நெல்லிக்கனி இதயத்திற்கு மிகுந்த பலனைத் தரவல்லது.  ஒரு நெல்லிக்கனியில் 4 ஆப்பிளுக்கு இணையான சத்துக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.  இதனை ஜாமாகவும், இலேகிய மாகவும் செய்து சாப்பிடலாம்.

மார்பில் வலியும், மரத்துப்போன உணர்வும் ஏற்பட்டால் உடனே திராட்சைச் சாறு அருந்தலாம்.  இது வலியைக் குறைக்கும் இதய நோயாளிகள் தினமும் திராட்சை சாறு பருகுவது நல்லது.  அது நோயைக் குணப்படுத்த உதவும்.

ஆரஞ்சு பழமும், அதன் பழச்சாறும் இதயம், மார்புநோய் போன்றவற்றிற்கு சிறந்த டானிக் ஆகும்.  இதனை இதய சம்பந்தப்பட்ட நோயாளிகள் தினமும் அருந்துவது நல்லது.

அதுபோல் உலர்ந்த திராட்சை, பேரீச்சை, அத்திப்பழம் போன்றவை இரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன்  இதயத்தை பாதுகாக்கவும் செய்கிறது.

உடலில் உள்ள அதிக உப்பைக் குறைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கனிகளுக்கு உண்டு.
இதயத்திற்கு இதமான கனிகளை உண்டு இதயத்தைப் பாதுகாப்போம்.

திங்கள், 23 ஜனவரி, 2012

உடற்பயிற்சியும் அவசர புத்தியும்

உடற்பயிற்சியும் அவசர புத்தியும்.


லை தெறிக்க ஓடி கொண்டிருந்தவனை ஒருவன் நிறுத்தி எதற்காக ஓடுகிறாய் என்று கேட்டானாம் அதற்கு ஒடிக் கொண்டிருந்தவன் எல்லோரும் ஓடுறாய்ங்ளா? அதான் நானும் ஓடிக் கொண்டிருக்கிறேன் என்று பதில் சொன்னனாம்.

நண்பர் ஒருவர் என்னிடம் வந்தார் மாஸ்டர் இரண்டு மாதத்தில் ஊருக்கு வெக்கஸேன் போகிறேன் ஊருக்கு போனவுடன் திருமணம் அதனால் என்னுடைய தொந்தியை குறைத்து ஜெஸ்ட்ட கூட்டி கைகளில் ஆம்ஸ் வந்து நல்ல ஆரோக்கியமானவனாக மாறுவதற்கு உங்கள் வகுப்பில் பயிற்சி இருக்கிறதா என்று கேட்டார்.

அவருடைய அறியாமையை நினைத்து எனக்கு வருத்தமாக இருந்தது அவருக்கு உடற்பயிற்சி சம்பந்தமாக ஒரு சில விளக்கங்கள் கொடுத்தேன்.அதை உங்களோடும் பகிர்ந்துக் கொள்கிறேன்.
முதலில் ஒன்றை தெரிந்துக் கொள்ளுங்கள்.

வெளித்தோற்றத்தில் ஆம்ஸ் ஜெஸ்ட் இருந்து விட்டால் அது ஆரோக்கியமான உடலா?




ஆளாளப்பட்ட அர்னால்டு ஸ்வாஷ்நெகர் அவர்களால் கூட இருதய அறுவை சிகிச்சையிலிருந்து தப்ப முடியவில்லை இரண்டு முறை இருதய (பைபாஸ்) அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

சில தொழில்ரீதியான (ஜிம்) உடற்பயிற்சி நிலையங்களில் 6 மாதத்தில் உடலை ஒரு வழி பன்னி பாடி பில்டர் ஆக்கி விடுகிறோம் என்று சொல்லி இரும்புக் கருவிகளை பயன்படுத்தி ஒரளவுக்கு வெற்றியும் பெறுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள் வெளிப்புற தோற்ற அழகிற்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை உள்ளுருப்புகளுக்கு கொடுப்பதில்லை.

விளைவு அளவுக்கதிகமான பாரம் ஏற்றி வண்டியின் அச்சு முறிவது போல்
உடல் நலக் கேட்டை அறியாமல் பெற்றுக் கொள்கின்றனர்.

அதாவது உளுத்துப் போன கதவிற்கு அழகிய வண்ண பெயிண்ட் அடித்து புதிதான வலிமையான கதவு போல காட்டிக் கொள்ளும் உத்தி இது.

பிறருக்காக வாழதீர்கள். உடல் ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சி செய்யுங்கள். நாம் ஒன்றும் உடலை கட்டழாக்கி சினிமாவில் நடிக்க போவதில்லை. பிறருக்காக வாழ்வது வேதனையானது.

கிரவுண்ட் உடற்பயிற்சி யோகா இவைகள் நீண்ட நாட்களாக செய்தால் தான் பலன் கிடைக்கும் ஆனால் பலன் நிரந்தரமானது எதிர்வினை இல்லாதது. உள்ளுருப்புகளை பாதுகாத்து ஆரோக்கியம் அளிக்கக் கூடியது.

உங்களுக்கு புரியும் மொழியில் சொல்லுவதாக இருந்தால்.

ஒரு கம்யூட்டர் வாங்குகிறோம் (ஹார்டுவேர்) வெளித்தோற்றம் அழகாக இருக்கிறது ஆனால் (சாப்ட்வேர்) அத்தியாவசிய உள்ளுருப்புகள்  சரியில்லை என்றால் அந்த கம்பியூட்டரை புறக்கனிப்போம் அல்லவா.

யோகாவும் கிரவுண்ட் உடற்பயிற்சிகளும் உள்ளுருப்புகளை பேணி பாதுகாக்கும் ஆனால் சிறிது கால தாமதமாகும். ஆனால் துரதிஷ்டமாக நம்பிக்கையோடும் பொறுமையோடும் தினசரி தொடர்ச்சியாக உடற்பயிற்சி யாரும் செய்வதில்லை ரெடிமேட் உலகில் அனைத்தையும் ரெடிமேடாக பெற்றுக் கொள்ள ஆசைப் படுகிறார்கள். 

ஒரு வாகனமோ, ஒரு இயந்திரமோ சரியாக இயங்க வேண்டுமானால் அதற்கு இரண்டு முக்கியத் தேவைகள் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே!
அதாவது –
1.அதன் உள்ளுறுப்புகள் பழுதுபடாது நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
2.அதை இயக்க விரும்பியவுடனே செயல்படுமாறு அதற்கு ஒரு லயம் (ரிதம்) இருக்க வேண்டும்.
உடலும் ஒர் இயந்திரமே. அது நன்கு இயங்க இந்த இரண்டு அம்சங்களையும் உடற்பயிற்சிகள் வெகு சிறப்பான முறையில் நிர்வகிக்கிறது.
நமது உடல் நலம் நல்ல, நிலையில் இயங்க அத்தியாவசியமான உள்ளுறுப்புகளை உடற்பயிற்சி செம்மைப்படுத்துகிறது.
எந்த இயந்திரமும் மூன்று நிலைகள் உண்டு.
1.வேகம், 2.மந்தம், 3.நிதானம். வேகமாக ஓடும் இயந்திரம் சீக்கிரத்தில் பழுதுபட்டு விடும். மந்தமாக ஓடும் இயந்திரம் அனைவராலும் புறக்கணிக்கப்படும்.
நிதானமாக ஓரே சீரில் ஓடும் இயந்திரம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும். நிதானம் எனப்படும் நடுவு நிலையே உடல் என்ற இயந்திரத்திற்கு அத்தியாவசியமானது.

உடற்பயிற்சிகளை பொறுத்த வரை அவசரப் பாடதீர்கள் பார்க்க எளிமையான பயிற்களாக இருந்தாலும் நிரந்தர பலன்களை அளிக்கக் கூடியவைகளை தேர்ந்தெடுத்துச் செய்யுங்கள். நடுநிலையை பேனுங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அதே சமயத்தில் ரோம்பவும் முருக்கேற்ற தேவையில்லை.

இன்றியமையாத இரும்புச் சத்து

இன்றியமையாத இரும்புச் சத்து…….

மனிதனுடைய உடல் ஆரோக்கியத்திற்கு, உடம்பில் பல சத்துக்கள் அவசியப்படுகின்றன. காபோஹைட்ரேட், புரதம், கல்சியம் ,விற்றமின், தாதுப் பொருட்கள் என்று  பல சத்துக்கள் வேறுபட்ட உணவு வகைகளை மனிதன் உண்ணும்போதுதான், உடம்பில் பல்வேறு சத்துக்கள் சேர்ந்து , பல நோய்களின் பிடியிலிருந்து, தன்னை அவனால் மீட்டுக் கொள்ள முடிகின்றது. அதாவது நிறையுணவு என்பது அவனுக்கு அவசியம் தேவை.
இரும்புச் சத்து மனிதனுக்கு மிக அவசியப்படும் ஒன்றாகும். இரும்புத் தாதுவை உள்ளடக்கிய பல உணவுப் பொருட்களை மனிதன் அவசியம் தனது அன்றாட உணவில் சேர்த்தாக வேண்டும். குறிப்பாக கருவுற்றிருக்கும்
பெண்ணுக்கு இன்றியமையாததாக அமைவது இந்த இரும்புச் சத்துதான். இரும்புச் சத்து
குறைந்தால், நம்மைத் தேடிவருவது இரத்தச் சோகை நோய்தான்.
பழங்களும், மரக்கறிகளும்  பல சத்துக்களையும் உள்ளடக்கியவையாக இருக்கின்றன. இவைகளை நாம் நிறைய உண்ண வேண்டும். எந்த மரக்கறிகளில் என்ன இருக்கின்றது என்று அறியுமுன்பாக, ஏன் இந்த இரும்புத் தாதுப் பொருட்கள் மனித உடலுக்கு அவசியம் என்பதை சற்றே நோக்குவோம்.
நமது குருதியில், செங்குருதிக் கலம், வெண்குருதிக் கலம் என்று இரண்டும் காணப்படுகின்றன. உடலின் பல அவயவங்களுக்கும், ஒட்சிசனை  இந்தச் செங்குருதிக் கலங்கள் விநியோகிக்க, அவற்றிற்கு hemoglobin   தேவைப்படுகின்றது. இது உடலில்  குறைவாக இருந்தால், பல்தரப்பட்ட
நோய்கள், நம்மிடம் அழையா விருந்தாளிகளாக வந்துவிடும். இரும்புச் சத்து கொண்ட உணவைச் சாப்பிட்டு வந்தால், இந்தத் தொல்லைக்கு இடமிராது.
இரும்புச் சத்து, உடலுக்கு வேண்டிய சக்தியைத் தருவதோடு, மூளை வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களுக்குப் பெருந்துணையாக இருக்கின்றது.
எல்லோருக்குமே இரும்புச் சத்து தேவைதான் என்றாலும், ஒருவருடையவளர்ச்சியின்   வேறு கட்டங்களில், வேறு அளவு இரும்புச் சத்து உடலுக்குத் தேவைப்படுகின்றது. 6தொடக்கம் 12 மாதங்கள் வரை  வயதுடைய
குழந்தைக்குத் தேவைப்படுவது தினமும் 11மி.கிராம் அளவு இரும்புச் சத்து. ஒரு வயது தொடக்கம் 12 வயதுவரை உள்ள பிள்ளைகளுக்கு தினமும் 7தொடக்கம் 10 மில்லிகிராம் அளவு அவசியப்படுகின்றது.
ரீன் ஏஜ் எனப்படும் பதின்வயதினருக்கு, குறி;ப்பாக ஆண்களுக்கு 11 மி.கிராம் அளவும், பெண்களுக்கு 15மி.கிராம் அளவும், தினமும் தேவை. (பெண்களின் மாதவிடாய் இங்கே கணக்கில் எடுக்கப்படுகின்றது). கர்ப்பிணிப் பெண்ணுக்கோ தினமும் 27மி.கிராமுக்கு அதிகமான இரும்புச் சத்து அவசியம் தேவை. அதே சமயம் தாய்ப்பால் ஊட்டும் ஒருவருக்கு 10மி.கிராம் இரும்புச் சத்து போதுமானது.
19வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு அதிகம் இரும்புச் சத்து தேவைப்படுவதில்லை. தினமும் 8 மி.கிராம் அளவு உணவில் இருந்தால் போதுமானது.
எல்லா மரக்கறிகளிலும், பலவகைச் சத்துக்களும் இருந்தபோதிலும், சிலமரக்கறிகள் இரும்புச் சத்துக்கு பிரபல்யமானவை. கீழே தரப்படும் அட்டவணையில் எந்தமரக்கறியில் எந்த அளவு இரும்புச் சத்து உண்டு என்பது சொல்லப்பட்டிருக்கின்றது.
VegetablesQuantityIron (mg)
Soybeans2 cups30
Cooked Spinach2 cups12.8
Swiss Chard (cooked)2 cups8
Peas2 cups6.76
Chickpeas2 cups6.4
Turnip Greens2 cups6.4
Collard Greens2 cups6.2
Potato2 large6
Asparagus2 cups5.74
Parsley1 cup5.5
Water Cress2 cups4.4
Brussels Sprouts2 cups3.8
Cooked Pumpkin2 cups3.4
Beetroot2 cups2.68
பழங்களை நோக்கினால், பேரீச்சம் பழம் நிறைய இரும்புச்சத்தைக் கொண்டது. watermelon  இலும் தாராளமாக இரும்புச் சத்து இருக்கின்றது.
மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கோழிஈரல் போன்றவற்றில் நிறைய இரும்புச் சத்து இருப்பது, மாமிசப்
பிரியர்களுக்கான ஒரு நல்ல செய்தி.
எனவே கண்டதும் கற்று, பண்டிதனாவது போல, பிடித்தமானதையும், பிடிக்காததையும் (இதில் சற்றே
அதிகமாக) உண்டு, பிணியின்றி வாழ்வோமாக.

நீர் பருகி, நாமும் நலமாய் வாழந்திடுவோம்

தண்ணீர் அருந்துவதும், உடல் இளைப்பதும், எடை குறைவதும், ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டது என்று நீங்கள் நம்புகின்றீர்களா?
பல பத்திரிகைகள் , சஞ்சிகைகள் இதுபற்றி நிறைய எழுதி வருகின்றன. இது எந்த அளவுக்கு உண்மையாக இருக்கலாம்?
நிறைய நீரை அருந்தும்போது, அடிக்கடி பாத்ரூம் செல்ல வேண்டி ஏற்படுகின்றது. ஒருவரது சமிபாட்டு முறை சீராகச் செயற்படத்
தொடங்குகின்றது. இந்த நிலையில் ஒருவர் அதிகமான கலோரி உணவை உட்கொண்டு
, நீரையும் நிறைய அருந்தி வந்தால், அது உடல் எடை குறைவதைப் பாதிக்குமா? குடிக்கும் நீருக்கும் , உடல் எடை குறைவதற்கும் எப்படிச் சம்பந்தம் ஏற்படுகின்றது?
 நாம் குடிக்கும் தண்ணீர் உடலின் சமிபாட்டு முறையை சீராக்குவதன் விளைவே எடை குறைவுக்கான காரணமாகும். நாம் உண்ணும் உணவு, சமிபாட்டு ஒழுங்குமுறைக்குள் கொண்டுவரப்பட்ட, தண்ணீரே முக்கிய காரணயாகின்றது. தண்ணீரைக் குடிக்கும்போது பசி என்பது போக்கப்படுகின்றது. உடம்பில் நீர் குறைவாக இருக்கும்போது, எமக்கு
அதிகம் சாப்பிடும் உணர்வு தோன்றுகின்றது. அதே சமயம் நீர் நிறைய அருந்திவரும்போது
, பசிப்பது
என்பது கட்டுப்படுத்தப்படுகின்றது.

உடலில் நீர் அற்ற தன்மை ஏன் வரவேண்டும்? தேநீர், காப்பி, பழரசம், கோலாஎன்று பலவற்றையும் அடிக்கடி அருந்துகிறோமே. இந்த நிலையில் ஏன் உடலில் நீர் பற்றாக்குறை வரவேண்டும் என்று கேட்பது நியாமான கேள்விதான். நீர்ப் பதார்த்தமாக
இருந்தாலும்
, இது தண்ணீர் இல்லை என்பதே யதார்த்தம். தினமும் நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்கின்றோம் என்பதைப் பொறுத்தே, எமது எடை கூடுவதோ குறைவதோ, இடம்பெறுகின்றது.
குண்டான உடல் இளைப்பதற்கு  பலரும் பல வழிகளை கையாளுகிறார்கள். நீங்கள்கடைப்பிடிப்பதற்கு எளிதான வழி, சாப்பாட்டுக்கு முன்பு ஒரு அரை லீற்றர் தண்ணீர் குடியுங்கள் போதும், உங்கள் உடல் எடை குறைந்து விடும் என்று புதியஆராய்ச்சியில் விஞ்ஞானிகள்கண்டுபிடித்துள்ளனர்.
சாப்பாட்டுக்கு முன்பு அரை லீற்றர் வீதம் 12 வாரங்களுக்கு தண்ணீர் குடித்தால் நீங்கள் உடல் நிறை குறைந்தவர்கள் ஆகிவிடுவீர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். நாள் ஒன்றுக்கு 3 முறை சாப்பாட்டுக்கு முன்பு தண்ணீர் குடித்தால்
இரண்டரைக் கிலோ நிறை குறைந்து விடும் என்று பிரெண்டா டேவி என்ற அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்துள்ளார். ஆபத்தில்லாத மருந்து அருந்தித்தான் பாருங்களேன்.
நீர் சுகதேகியாக வாழவிரும்பிடின் அருந்திடுவீர் நீர்தன்னை!!!! ;. இனிப்பான பானங்கள் நமக்கு இனியெதற்கு? நாளும்
பொழுதும் நல்ல நீர் பருகி
, நாமும்நலமாய் வாழந்திடுவோம்

உண்ணும் உணவு

ஆரோக்கியமான உணவு
நீண்ட நாட்கள் நோயின்றி ஆரோக்கியமாக  வாழும் மனிதர்களின் ரகசியம் அவர்கள் உண்ணும் உணவு முறையில் தான் ஒளிந்திருக்கிறது.
ஆரோக்கியமான உடல் அமைப்பிற்கு 80 சதவீதகாரத்தன்மையும், 20 சதவீத அமிலத்தன்மையும் கொண்ட உணவு தேவை. இந்த விகிதத்தில்இருந்தால் தான் நிறைந்த சக்தியும், நீடித்த ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்கும்.
மிருகங்களின் மாமிசம், தானியங்கள், அரிசி இவற்றில் அமிலத்தன்மை அதிகம் உள்ளன. பச்சைப் பட்டாணி, வெங்காயம், கீரை வகைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றில் காரத்தன்மை உள்ளது.
அமிலத்தன்மை ஒரு சதவீதமும், காரத்தன்மை நான்கு சதவீதமும் கொண்ட உணவையே ஆரோக்கிய வாழ்க்கைக்குத் தேர்வு செய்ய வேண்டும். குடும்ப நலம் பேணும் தாய்மார்கள் சிறந்த உணவு உண்ண
வேண்டும்.
வேலை அலுப்பு மற்றும் பல்வேறு காரணங்களால் பட்டினி கிடக்கும் பெண்கள் மிகுந்த சக்தி இழுப்புக்கு ஆளாக நேரிடுகிறது. இழந்த சக்தியை ஈடு செய்யவும், உடல் நலம் பேணவும் தேவையான கலோரி
சத்துள்ள உணவைக் கண்டறிந்து சாப்பிடுவது அவசியம்.
மனிதர்களுக்கு ஒரு நாளைக்கு 1800லிருந்து 2000 கலோரி வரை உணவு தேவைப்படுகிறது. இதனை அடைவதற்குத் தக்க உணவை அறிந்து சாப்பிடுதல் மிகவும் அவசியம்.

ஆரோக்கியமான உணவு

நோயாளிகளுக்கு மட்டுமல்ல, சராசரி மனிதனுக்கும் உணவுக்கட்டுப்பாடு தேவை. கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்களுக்கு தேவையான உணவு 60 வயதுள்ளவர்களுக்கு ஒத்து வராது. வயது ஏற ஏற உணவுக்கட்டுப்பாடு மிக அவசியம். 60 வயதானவர்களின் அன்றாட வேலை குறைவு. அவர்களுக்கு 1550 கலோரி போதுமானது.
பசிக்கும் போது உண்ண வேண்டும். வயிறு புடைக்க அளவில்லாமல் உண்ணுவது கூடாது. அவசர அவசரமாக சாப்பிடக்கூடாது. நன்கு மென்று உண்ண வேண்டும்.
நல்ல தரம் உடைய, இயற்கையான, முழுமையான உணவுப் பதார்த்தங்களை தேர்ந்தெடுத்து உண்ணவும்.
சமையல் விஸ்தாரமாக செய்யாமல், குறைவான நேரத்தில் சமையலை முடியுங்கள். அதிக நேரம் அடுப்பில் சுட வைத்தால் வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் இவை அழிந்து விடும்.
பழரசமாக மாற்றுவதை விட, பழங்களை நேரடியாக சாப்பிடுவது நல்லது. நார்ச்சத்து முழுமையாக கிடைக்கும்.
பல தரப்பட்ட உணவுகளை ‘டயட்’ டில் சேர்த்துக் கொள்ளவும்.
பூரித (ஷிணீtuக்ஷீணீtமீபீ) கொழுப்பை தவிர்க்கவும்.
புகையிலை, சிகரெட், மது வேண்டாம்.
தினமும் 6 – 8 டம்ளர் தண்ணீர் பருகவும்.
உண்ணும் போது பாதி வயிற்றில் காய்கறிகள், பழங்கள் தெளிவான ரசம், வெண்ணெய் எடுக்கப்பட்ட மோர் இவற்றால் நிரப்பி, கால் வயிற்றில் அரிசி அல்லது கோதுமை பண்டங்களால் நிரப்பி பாக்கியை காலியாக வைக்கவும்.
எந்த வேளை உணவையும் முழுமையாக தவிர்க்க வேண்டாம். காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்க வேண்டாம்.
அதிகமாக எப்போதாவது சாப்பிட்டால், அதிகப்படி கலோரிகளை எரிக்க அதிக உடல் உழைப்பு தேவை.

விட்டமின் டி

நமக்கு இலவசமாக கிடைக்கும் விட்டமின் தான் விட்டமின் டி. இதை நாம் நேரடியாக சூரிய ஒளியிலிருந்து பெறலாம். தினமும் காலையில் ஒரு குறிப்பிட்ட நேரம் வெய்யில் குளியல் செய்தால் போதும். இந்த குறிப்பிட்ட நேரம் மனிதருக்கு மனிதர் மாறுபடும்.
சூரிய ஒளியில் உள்ள அல்ட்ரா – வயலெட் கதிர்கள் நாம் உடலின் கொழுப்பு திசுக்களில் மேல் படியும் போது, இரசாயன மாறுதலால் வைட்டமின் டி தோன்றுகின்றது. எவ்வளவு நேரம் சூரிய ஒளி பட வேண்டும் என்பது பல விஷயங்களை பொருத்தது. நம்முடைய தோல் நிறம், வயது எப்போது வீட்டிலிருந்து வெளியே செல்கின்றோம் முதலியவை அடிப்படை காரணங்கள்.
வெள்ளை தோல் உள்ளவர்கள், தினமும் 1/2 மணி நேரம் நேரடியாக சூரிய ஒளியில் உலாவினால் அவர்களுக்கு தேவையான விட்டமின் ‘டி’ உருவாகி விடுகின்றது. குளிர்காலத்தில் சிறிது அதிக நேரம் பிடிக்கும். கருமை நிறமுடையவர்கள் சூரிய ஒளியில் அதிக நேரம் உலாவினால் சர்ம பாதிப்புகள் ஏற்படலாம். கோடையில் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி நேரம் வெளியே போவதை தவிர்ப்பது நல்லது. போக நேர்ந்தால் குடை (அ) தொப்பி, உடல் முழுவதும் மூடும் ஆடைகளுடன் செல்லவும். சன் கிரீம் லோசன்-ஐ தடவிக் கொள்ளலாம்.
பயன்கள்
உணவிலிருந்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்களை உடல் கிரகிக்க உதவுகின்றது. இதனால் எலும்புகள், பற்கள் வலிவடைகின்றன.
விட்டமின் டி குறைந்தால் பஞ்சு போல் நெகிழ்ந்து வளையும். எலும்பு நோயான ரிக்கெட்ஸ் குழந்தைகளை தாக்குகின்றது.
விட்டமின் டி குறைபாட்டினால் அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படும்.
கிடைக்கும் பொருட்கள்
சூரிய ஒளி
பால்
வெண்ணெய்
தானியங்கள்
கீரை, காய்கறிகள்
முட்டை
மீன்கள்.
தினசரி தேவை
50 வயதை தாண்டியவர்களுக்கு தாங்கள் வழக்கமாக உட்கொள்வதை விட இரு மடங்கு அதிகம் எடுத்துக் கொள்ளவும். 70 வயதை தாண்டியவர்களுக்கு இன்னும் அதிகம் தேவை.
50 வயதிற்கு குறைந்தவர்கள் – 200 ஐ.யு.
51 லிருந்து 70 வயது வரை – 400 ஐ.யு.
70 வயதை தாண்டியவர்கள் – 600 ஐ.யு.
வைட்டமின் டி குறைந்தால்
முன்பு சொன்னபடி குழந்தைகளுக்கு ரிக்கெட்ஸ் ஏற்படும். ஆஸ்டியோ பொராசிஸ் ஏற்படலாம்.
காது கேளாமை, வாய் தொண்டை எரிச்சல்.
எலும்பு, தசை பலவீனமடையும்.
அதிகமானால்
பசியின்மை, தலை வலி, பேதி ஏற்படலாம். உடல் சோர்வடையும். கால்சியம் தேங்கி அதிக அளவு நாளங்களில், சிறுநீரகத்தில், இதயத்தில் படிந்து பல நோய்களை உண்டாக்கும்

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

நார்சத்து நமது உயிர்சத்து

நமது உணவு முறை தவறுகளாலேயே பல நோய்கள் தோன்றுகின்றன. ஆகவே நமது உணவுகள் பற்றியும், அதன் தன்மைகளை பற்றியும் தெரிந்து கொண்டால் தான். அதனை நாம் பயன்படுத்த முயல்வோம். இல்லையேல் தேவையானவற்றை நீக்கியும், தேவையற்றவற்றை உபயோகித்தும் நோய்களுக்கு ஆளாகி விடுவோம். உணவுகளில் மிகவும் முக்கியமானது நார்ச்சத்து. இது பல நோய்கள் வராமல் தடுத்து காப்பாற்றவல்லது. இந்த நார்ச்சத்து மிகவும் அதிகமாக பழங்கள், காய்கள், கீரைகள், தானியங்கள் முதலியவற்றில் தான் அதிகமாக உள்ளது. இதனைப்பற்றி நாம் தெரிந்துக் கொண்டு, பயன்படுத்தி நோய்கள் நீங்கி நலமுடன் வாழ்வோம்.
பழங்களிலும், காய்கறிகளிலும், தானியங்களிலும், கீரைகளிலும் மிக எளிதில் கிடைக்கும் உணவுப் பொருளாக இருப்பது நார்ச்சத்து ஆகும். பழங்கள், காய்களில் அதன் மேல் தோல்களிலும், தானியங்களில் உமிகளிலும் உள்ளது. தண்ணீர் உட்பட மிக எளிதில் கிடைக்கும். எந்த, பொருட்களையும் நாம் துதிப்பதுமில்லை, மதிப்பதுமில்லை உமி என்பது செல்லுலோஸ் என்னும் நார்சத்து ஆகும். தவிடு என்பது தையமின் ஆகும். தவிட்டில் ஏராளமான வைட்டமின்கள் உள்ளது என்று பல ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் செல்லுலோஸ் பற்றி நாம் கண்டு கொள்வதில்லை. தற்போது தான் செல்லுலோஸ் என்னும் நார்ச்சத்து, நமது உடலுக்கும், குடலுக்கும் ஒர் இன்றியமையாத வேர் சத்து என்று புரிந்துக் கொண்டுள்ளனர். இருப்பினும் இன்னும் இதனை யாரும் பயன்படுத்துவதில்லை.
பல சாலிக்கு பாலிசாக்ரைடுகள் கூட்டு சர்க்கரை உடலுக்கு சக்தி தரும் உணவுகளில் கார்போஹைட்ரேட்டுகள் முக்கியமானவை. சக்தி மாற்றத்திற்கு நமது உடல், கார்போஹைட்ரேட்டைத் தான் தேர்ந்தெடுக்கிறது. இது இல்லாத போதே புரதமும், கொழுப்பும் எரிக்கப்படுகின்றன. இது நமது உடலில் கீழ்க்கண்டவாறு மாற்றப்படுகின்றன.
பாலி சாக்ரைடுகள் ஸ்டார்ச்சு, டெக்ஸ்டிரின், கிளைகோஜன், செல்லுலோஸ்
டைசாக்ரைடுகள் இரட்டை சர்க்கரை சுக்ரோஸ், மால்டோஸ், லாக்டோஸ்
மோனோ சாக்ரைடுகள் ஒற்றை சர்க்கரை குளூக்கோஸ், பிரக்டோஸ், காலக்டோஸ் ஆகவும் மாற்றப்படுகின்றன
நாம் பாலிசாக்கரைட்டுகளை உண்டு, அவைகள் நமது சீரண நீர்களால் டைசாக்கரைட்டுகளாகவும், மோனோ சாக்கரைட்டுகளாகவும், மாற்றப்படுவதே சரியான வழியாகும். அவ்வாறில்லாமல், மோனோ சாக்கரைட்டுகளையே நாம் உண்போமானால் செரிமான பாதையில் தடைகள் ஏற்படும். ஆரோக்கியமும் கெடும்.
நார்சத்து என்றால் என்ன செல்லுலோஸ் பாலிசாக்கரைடுகளில் சேர்ந்தே உள்ளது. இது தாவரங்களில் மட்டுமே காணப்படும். நார்ப்பொருளாகும். தாவரங்களில் உள்ள உயிரணுக்களின் சுற்றுச்சுவரில் இந்த நார்ச்சத்து இருப்பதால் தான், தாவரங்களில் மட்டும் இது காணப்படுகிறது. விலங்குகளின் செல்களில் சுற்றுச்சுவர் கிடையாது. அதனால் இது, சீரண நீர்களால், சீரணிக்கப்படுவதில்லை. சீரணத்திற்குப் பிறகும் மாற்றம் அடையாது அப்படியே உள்ளது.
நார்ச்சத்து உள்ள உணவுப் பொருட்கள் முழு தானியங்கள், பயிறுகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளில் ஏராளமான செல்லுலோஸ் அடங்கி உள்ளது. தானியங்களையும் பயிறுகளையும் முதல் நாள் ஊற வைத்து, இரண்டாம் நாள் முளை கட்டுகின்ற போது நார்ச்சத்து பெருக்கமடைகிறது. முருங்கக் கீரைகளிலும், அகத்திக்கீரையிலும் இது நிரம்ப உண்டு. காய்கறிகளில் குறிப்பாக அவரை இனங்களில் இதற்கு குறைவில்லை. மாமிச உணவுகளிலும், தோல் நீக்கப்பட்ட தானியங்கள், பருப்புகள் மற்றும் கிழங்குகளில் இது இல்லை.
மலச்சிக்கலுக்கு மாமருந்து
நார்ச்சத்து அடங்கிய உணவு, நமது குடலுக்கு வலிமையை சேர்க்கிறது. இந்த நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு மருந்தாக அமைகிறது. அது மட்டுமல்லாமல் மலச்சிக்கலை வருமுன் காக்க இந்த நார்ச்சத்து மிகவும் முக்கியமானது. இந்த செல்லுலோஸ் எனப்படும். நார்ச்சத்து உணவுடன் செல்லும் நீரை ஈர்த்து கொள்ளும் வேலையை செய்கிறது. இதனால் எப்பொழுதும் மலம் இளக்கமாகவே இருந்து, குடலில் எங்கும் தங்காமல் அவ்வப்போது வெளியேறிவிடுகிறது. இந்த நார்ச்சத்தை உண்ண நாம் தவறிவிட்டால், மலம் கெட்டிபட்டு காலைகடனை தினமும் செய்யமுடியாமல் இரண்டு (அ) மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் மலம் கழிக்க முடியும். மலம் கெட்டிபடுவாதல் சுலபமாக மலத்தை வெளியேற்ற முடியாமல், தேவைக்கும் அதிகமான சக்தியை கொடுத்து முக்கி, முனகி மலத்தை வெளியேற்றுவதால் மலவாயில் உள்ள இரத்த குழாய்கள் அதிக இரத்த ஒட்டத்தை கொடுக்க நேரிடுகிறது. இதனால் நாளடைவில் அந்த இரத்த குழாய்களுக்கு இரத்த தேக்கம் ஏற்பட்டு, அந்த இரத்த குழாய்கள் வீக்கம் அடைந்து நாளடைவில் வெடித்து விடுகின்றன. இதை தான் மூலநோய் என்று சொல்கிறோம். இதனால் சரிவர உட்கார முடியாமை, அதிக இரத்தபோக்கு, அடிக்கடி மலம் கழிக்க வேண்டும். போன்ற உணர்வு, இரத்த சோகை, உடல் மற்றும் மனச்சோர்வு, பசியின்மை, போன்றவை ஏற்படுகின்றன. இந்த மூலநோய் முற்றிவிடாத இரத்த போக்கால் குடல்களில் சோர்வு ஏற்பட்டு, குடல்கள் வறண்டு குடல்புற்று நோயாக உருவெடுக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. ஒரு சாதாரண விஷயமான இயற்கையில் கிடைக்கும் பழங்கள், தானியங்கள் மற்றும் கீரைகளை குறிப்பாக நார்சத்து உள்ள தோல்பகுதியை நீக்காமல் உண்ண தவறுவதால் ஏற்படும் விளைவுகள் பலப்பல. எனவே நார்சத்தின் பயன்களை அறிந்து அவற்றை உணவில் சேர்த்து பலன் பெறுவோம். குறிப்பாக தினமும் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கத்தை கொண்டாலும் கூட 50% மலச்சிக்கலை தவிர்க்கலாம். பொதுவாக நாம் அனைவரும் வீட்டில் செய்யும் தவறுகள் பலப்பல. அவை முதலில் அரிசி பொதுவாக தவிடு நீக்கிய அரிசியை தான் நாம் வாங்குகிறோம். தவிடு நீக்கிய அரிசியின் மேல் உமி என்னும் நார்ச்சத்து படர்ந்து காணப்படும். இது மிக மிக முக்கியமானது. அரிசியை கழுவுவதின் மூலம் 50% உமியை நாம் இழந்து விடுகின்றோம். அரிசியை ஊற வைத்து பின்பு கழுவி சமைப்பதனின் மூலம் 80% நார்சத்தை நாம் இழந்து விடுகின்றோம். சமைத்த சாதத்தை வடிப்பதின் மூலம் 100% நார்சத்தை நாம் இழந்து விடுகின்றோம். மீதம் நாம் உண்பது ஒன்றுமே இல்லாத சாதம். அதை சாப்பிடுவதின் மூலம் ஒரு பயனுமில்லை. இதற்கும் மேலாக ஒரு படி மேலே போய், ஒரு சிலர் தவிடு நீக்கிய அரிசியை பாலீஷ் போடுவதின் மூலம் உமி என்கிற அந்த நார்சத்தை 100 முதலிலேயே இழந்து விடுகின்றனர். பிறகு சமைத்து சாப்பிடுவதால் சக்தி, நேரம் போன்றவை வீணாவதை தவிர வேறு ஒரு பலனும் நம்மை வந்தடைவதில்லை. எனவே அரிசியை பாலீஷ் போடுவதை அவசியம் தவிர்க்க வேண்டும். மேலும் அரிசியை ஒரு முறை கழுவிவிட்டு, இரண்டாவது முறை ஊறவைக்கும் தண்ணீரோடு அரிசியை வேக வைத்து, கஞ்சி வடிக்காமல் சாதம் செய்து சாப்பிட்டால் அரிசியிலுள்ள 80 நார்ச்சத்தை நாம் பெறலாம் என்பதில் சந்தேகமில்லை. மேற்கூரிய தவறுகளை திருத்தி கடைபிடித்தால் வேண்டிய நார்சத்தை பெற்று நலமோடிருக்கலாம்.